.

Pages

Monday, August 21, 2017

ஹஜ் செய்திகள்: உம்ரா சீசனில் 8 மில்லியன் யாத்ரீகர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்ப்பு !

அதிரை நியூஸ்: ஆக.21
வருடந்தோறும் சுமார் 10 மாதங்கள் உம்ரா செய்வதற்கான சீஸனாகும், எஞ்சிய 2 மாதங்கள் ஹஜ்ஜூநடவடிக்கைகள் தொடர்புடைய மாதங்களாகும். கடந்த வருட உம்ரா சீஸனில் சுமார் 7 மில்லியன் யாத்ரீகர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது புனித மக்காவின் ஹரம் ஷரீஃப் பள்ளி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் எதிர்வரும் உம்ரா சீஸனில் சுமார் 80 லட்சம் (8 மில்லியன்) உம்ரா யாத்ரீகர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுவதாக ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது.

நேற்று வரை சுமார் 213 கத்தார் பிரஜைகள் அல் சல்வா எல்லை (A; Salwa Border) வழியாக ஹஜ் கடமைகளை நிறைவேற்றிட வருகை தந்துள்ளனர். இவர்களுக்கான தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை சவுதி அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

ஹஜ் யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், ஊடுருவல்காரர்களை கண்டறிந்து வெளியேற்றுவது மற்றும் அவசரகால உதவிகள் போன்ற பணிகளுக்காக 16 சிறிய ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விமானங்களில் இரவு நேர கேமிராக்கள், தெர்மல் கேமிராக்கள், நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள், ஆம்புலன்ஸில் உள்ளது போன்ற மருத்துவ உபகரணங்கள் போன்றவை பொருத்தப்பட்டள்ளன.

இதற்கிடையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரையிலான கணக்கின்படி, புனித மக்காவிற்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற சுமார் 120,000 உள்நாட்டு யாத்ரீகர்களும் அவர்கள் கொண்டு வந்த சுமார் 61,400 வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.