அதிராம்பட்டினம், ஆக. 22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஜாவியாவில் பல வருடங்களாக ஓதிவரும் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் இன்று 22-08-2017 (1438-துல்கஅதா பிறை 29) செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு, அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் கே.டி முஹம்மது குட்டி ஆலிம் தலைமை வகித்து இஸ்லாமிய மார்க்க சிறப்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து 40 நாட்களுக்கு நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில், தினமும் அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸுடன் தொடங்கி காலை 7-45 மணிக்கு, இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சிறப்புரை, துஆ ஓதப்பட்டு, நிறைவில் தப்ரூக் உணவு வழங்கப்படும்.
இன்று செவ்வாய்க்கிழமை முதல் நாள் நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியப் பொதுமக்கள் 1500 பேர் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டி செய்துவருகின்றனர். இதன் நிறைவு விழா எதிர்வரும் 04-10-2017 அன்று புதன்கிழமை காலை நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஜாவியாவில் பல வருடங்களாக ஓதிவரும் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் இன்று 22-08-2017 (1438-துல்கஅதா பிறை 29) செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு, அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் கே.டி முஹம்மது குட்டி ஆலிம் தலைமை வகித்து இஸ்லாமிய மார்க்க சிறப்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து 40 நாட்களுக்கு நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில், தினமும் அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸுடன் தொடங்கி காலை 7-45 மணிக்கு, இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சிறப்புரை, துஆ ஓதப்பட்டு, நிறைவில் தப்ரூக் உணவு வழங்கப்படும்.
இன்று செவ்வாய்க்கிழமை முதல் நாள் நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியப் பொதுமக்கள் 1500 பேர் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டி செய்துவருகின்றனர். இதன் நிறைவு விழா எதிர்வரும் 04-10-2017 அன்று புதன்கிழமை காலை நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.