.

Pages

Sunday, August 27, 2017

பைலட்டிற்கு மாரடைப்பு ~ அவசரமாக தரையிறக்கப்பட்ட கத்தார் விமானம்!

அதிரை நியூஸ்: ஆக. 27
கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து இந்தோனேஷியாவின் பாலி தீவிற்கு (டென்ஸ்பர் விமான நிலையம்) சுமார் 240 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் விமானி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவசரமாக இந்தியாவின் ஹைதராபாத் (ஷம்ஷாபாத்) விமான நிலையத்தில் நள்ளிரவு 12.05 மணியளவில் தரையிறக்கப்பட்டது.

மாரடைப்பு ஏற்பட்ட விமானி உடனடியாக ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடல்நிலை தேறிவருகிறார். இந்நிலையில், கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் தரையிறக்கப்பட்ட விமானத்தின் பயணிகளை கருத்திற்கொண்டு உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ததால் அதிகாலை சுமார் 03.03 மணியளவில் மீண்டும் பாலி தீவிற்கு பறந்து சென்றது.

சுமார் 2 மாதங்களுக்கு முன் இதே ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து 244 பயணிகளுடன் ஹாங்காங் புறப்பட்ட கேத்தே பசிபிக் விமானம் ஒன்றின் மீது பறவை மோதியதால் ஏற்பட்ட சேதத்தை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே மீண்டும் ஹைதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவத்திற்கு பின் நிகழ்ந்துள்ள சம்பவம் இது.

Source: Hindustan Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.