.

Pages

Friday, August 18, 2017

செக்கடி குளத்திற்கு பம்பிங் நீர் வருகை (படங்கள்)

அதிராம்பட்டினம் ஆக.18
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியின் 8 ஊரணிகளுக்கு அதிரை நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வறட்சி காலங்களில் நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அதிரை பேரூராட்சி பொது நிதி ₹ 43.50 லட்சம் மதிப்பீட்டில் கடந்த வருடம் பணிகள் நிறைவடைந்து, இதையடுத்து, ஆலடி குளம், செக்கடி குளம் உள்ளிட்ட குளங்களுக்கு நீர் இறைக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் நசுவினி ஆற்றின் ஓடையிலிருந்து பம்பிங் மூலம் நீர் இறைக்கும் பணி இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் தொடங்கியதை அடுத்து, சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள செக்கடி குளத்திற்கு பம்பிங் நீர் வந்தடைந்தது. இதனால் இப்பகுதியினர் மகிழ்ச்சியடைந்தனர்.

பம்பிங் நீர் வருகையை அதிரை பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.எச் அஸ்லம் இன்று வெள்ளிக்கிழமை காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாய்க்காலில் சூழ்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து கூறுகையில்; செக்கடி குளம் நிரம்பியவுடன் இதன் இணைப்பில் உள்ள ஆலடிக் குளம் நிரப்பும் பணி நடைபெறும். மேலும் சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள காட்டுக்குளம், மரைக்கா குளங்களுக்கு பம்பிங் நீரை கொண்டு வருவதற்காக சுமார் ரூ. 19 லட்சம் திட்ட மதிப்பீட்டில் வண்டிப்பேட்டை பகுதி முதல் காட்டுக்குளம், மரைக்கா குளம் வரையில் குழாய்கள் புதைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.