.

Pages

Saturday, August 19, 2017

அதிரையில் நள்ளிரவில் தொடரும் திருடர்களின் அட்டுழியம்: கடை பூட்டை உடைத்து செல்போன்கள், பணம் திருட்டு !

அதிராம்பட்டினம், ஆக.19
அதிராம்பட்டினம், நடுத்தெருவில் உள்ள கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், பணம் திருட்டு. நள்ளிரவில் தொடரும் திருடர்களின் அட்டுழியத்தால் வர்த்தகர்கள் அதிர்ச்சி. நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் நூருல் அமீன். இவர் நடுத்தெரு பகுதியில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார். நேற்று வெள்ளிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடை பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை கடை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடை திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையினுள் ரீ சார்ஜ் செய்வதற்காக வைத்து இருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான 8 செல்போன்கள், ரொக்கம் ரூ. 20 ஆயிரம் ஆகியன திருட்டு போயிருப்பதாகக் கூறினார்.

அதேபோல், கடந்த ஆக.10 ந் தேதி நள்ளிரவில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த அபூபக்கர், கடைத்தெரு பகுதியில் இவர் நடத்தி வரும் மளிகை கடையில், பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ. 90 ஆயிரம் பணம் திருட்டு போனது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், அதிராம்பட்டினம் போலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மீண்டும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பி உள்ளது.

அதிராம்பட்டினம் பகுதியில் நள்ளிரவில் தொடர் திருட்டில் ஈடுபடும் திருடர்களின் அட்டுழியத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.