.

Pages

Thursday, October 19, 2017

பிட்னெஸ் சேலஞ்ச் - துபை பட்டத்து இளவரசர் அழைப்பு!

அதிரை நியூஸ்: அக்.19
பிட்னெஸ் சேலஞ்ச் - துபை பட்டத்து இளவரசர் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று  (புதன்) பகல் அமீரகவாசிகள் அனைவரும் துபை பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களிடமிருந்து ஒரு குறுஞ்செய்தியை நேரடியாக பெற்றனர்.

அதில் அவர் அமீரகம் வாழ் மக்கள் அனைவரையும் 'துபை பிட்னெஸ் சேலஞ்ச்' (Dubai Fitness Challenge) எனப்படும் உடற்பயிற்சி சவாலில் சேரும்படி வலியுறுத்தியிருந்ததை தொடர்ந்து பொதுமக்கள் மிகுந்த ஆராவரத்துடன் இளவரசரின் சவாலை ஏற்று உற்சாகமான பதில்களை தங்களுடைய சமூக வலைத்தளங்களின் வழியாக பகிர்ந்து வருகின்றனர்.

அக்டோபர் 2 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரம் உடற்பயிற்சி என்ற ஊக்குவிப்புத் திட்டம் இந்த மாதம் முழுவதும் நடைபெறவுள்ளது. இதின் சிறப்பு முகாம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20.10.2017) பகல் 1 மணிமுதல் இரவு 9 மணிவரையும், சனிக்கிழமை (21.10.2017) அன்று பகல் 1 மணிமுதல் மாலை 7 மணிவரையும் ஸபா பார்க்கில் (Safa Park) நடைபெறவுள்ளது.

இந்த இலவச முகாமில் நம் உடல் நலத்தை உடற்பயிற்சியின் மூலம் பேணுவதற்கான செயல்முறை விளக்கமும் சிறப்பு விபரங்களும் (Tips) வழங்கப்படவுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அந்த குறுஞ்செய்தியில் இணைக்கப்பட்டுள்ள சுட்டியின் வழியாக தங்களுடைய பெயரை பதிவு செய்து கொண்டு இந்த சவாலில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு இந்த சுட்டிகளை சொடுக்கிப் பார்க்கவும்.
நமது நாட்டில் 'நீங்க நல்லா இருக்கோனும் நம்ம நாடு முன்னேற' என தலைவர்களை பார்த்து பாடுவார்கள் ஆனால் துபையில் தலைவர்கள் தங்கள் நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் பார்த்து 'நீ நல்ல இருக்கோனும் எங்கள் நாடு முன்னேற' என மாற்றிப் பாடுகிறார்கள், இவ்வளவு தாங்க வித்தியாசம், இரண்டும் தப்பில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.