அதிரை நியூஸ்: அக். 19
துபையில் 2016 ஆம் ஆண்டு வரை சுமார் 1.1 மில்லியன் துபைவாசிகளே மருத்துவ இன்ஷூரன்ஸ் செய்திருந்த நிலையில் கட்டாயம் அனைவரும் இன்ஷூரன்ஸ் செய்து கொள்ள வேண்டும் என சட்டமியற்றப்பட்டதை தொடர்ந்து 4.6 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், துபைக்கு விசிட் விசாவில் வருபவர்களுக்கும் கட்டாய இன்ஷூரன்ஸ் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து அவசரகால மருத்துவ சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும் ஏற்கனவே நடைமுறையிலுள்ள துபைவாசிகளுக்கான அடிப்படை இன்ஷூரன்ஸ் திட்டத்தின் கீழ் கர்பப்பை வாய், பெருங்குடல் மற்றும் மார்பகப் பகுதிகளை பாதிக்கும் பலவகையிலான புற்றுநோய்கள், பிறந்த குழந்தைகளுக்கான ஸ்கேனிங் போன்றவையும் இணைக்கப்படும் என துபை சுகாதார ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் ஹைதர் அல் யூசுப் தெரிவித்தார்.
அமீரக மருத்துவத் துறை புதுமைகளை ஏற்று விரைவாக மாறிவருவதையும் அதன் தொடர்ச்சியாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), ரோபோடிக்ஸ், மொபைல் ஹெல்த், டெலிமெடிசின், நானோ டெக்னாலஜி போன்ற அனைத்து நவீன சிகிச்கை முறைகளும் விரைவில் இடம்பெறும் என மெடிகிளினிக் மிடில் ஈஸ்ட் நிறுவனத்தின் CEO தெரிவித்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் 2016 ஆம் ஆண்டு வரை சுமார் 1.1 மில்லியன் துபைவாசிகளே மருத்துவ இன்ஷூரன்ஸ் செய்திருந்த நிலையில் கட்டாயம் அனைவரும் இன்ஷூரன்ஸ் செய்து கொள்ள வேண்டும் என சட்டமியற்றப்பட்டதை தொடர்ந்து 4.6 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், துபைக்கு விசிட் விசாவில் வருபவர்களுக்கும் கட்டாய இன்ஷூரன்ஸ் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து அவசரகால மருத்துவ சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும் ஏற்கனவே நடைமுறையிலுள்ள துபைவாசிகளுக்கான அடிப்படை இன்ஷூரன்ஸ் திட்டத்தின் கீழ் கர்பப்பை வாய், பெருங்குடல் மற்றும் மார்பகப் பகுதிகளை பாதிக்கும் பலவகையிலான புற்றுநோய்கள், பிறந்த குழந்தைகளுக்கான ஸ்கேனிங் போன்றவையும் இணைக்கப்படும் என துபை சுகாதார ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் ஹைதர் அல் யூசுப் தெரிவித்தார்.
அமீரக மருத்துவத் துறை புதுமைகளை ஏற்று விரைவாக மாறிவருவதையும் அதன் தொடர்ச்சியாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), ரோபோடிக்ஸ், மொபைல் ஹெல்த், டெலிமெடிசின், நானோ டெக்னாலஜி போன்ற அனைத்து நவீன சிகிச்கை முறைகளும் விரைவில் இடம்பெறும் என மெடிகிளினிக் மிடில் ஈஸ்ட் நிறுவனத்தின் CEO தெரிவித்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.