அதிரை நியூஸ்: அக்.18
ஆஸ்திரேலியாவில் நன்னீர் முதலைகள், உப்புநீர் முதலைகள் என்பதுடன் கூடுதலாக இருவகை நீரிலும் வாழும் தன்மையுடைய The estuarine crocodile என்று அழைக்கப்படும் கழிமுகங்களில் வாழும் முதலைகளும் உள்ளன. இவை சுமார் 7 மீட்டர் நீளமும் 1 டன் எடைக்கு மேலும் உடையவை. இவைகளிடம் சிக்கி வருடத்திற்கு சராசரியாக 2 மனிதர்கள் உயிரிழக்கின்றனர்.
1970 ஆம் ஆண்டு இந்த வகை முதலைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆஸ்திரேலியா அரசு 'பாதுகாக்கப்பட்ட இனம்' (Protected Species) என அறிவித்ததை தொடர்ந்து இதன் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எழும்பத் துவங்கியுள்ளன.
கடந்த வாரம் மனநலம் பாதிக்கப்பட்ட 79 வயது அன்னா கேமரூன் என்ற மூதாட்டி அவரது பாதுகாப்பு நல மையத்திலிருந்து காணமல் போனார். அவரை தேடிய குவின்ஸ்லாந்து போலீஸாருக்கு போர்ட் டக்லஸின் மவ்ப்ரே ஆற்றின் கரையில் (Port Douglas Creek of Mowbrey River) அவரது கைத்தடி போன்ற சில பொருட்கள் மட்டுமே கிடைத்தன. மேலும் அந்த கழிமுகத்தில் வலைவீசி தேடியதன் விளைவாக அந்த மூதாட்டியை கொன்று தின்ற சுமார் 4 மீட்டர் நீளமடைய முதலை சிக்கியது, அதன் வயிற்றுக்குள் அன்னா கேமரூனின் உடற்பாகங்கள்.
இச்சம்பவத்தை தொடர்ந்து கருத்து தெரிவித்த அன்னா கேமரூனின் மகன் கிரைக் எக்கின்ஸ் என்பவர், முதலைகள் முதலைகளாகத் தான் வாழ்கின்றன. அவற்றின் இயற்கை தன்மைக்காக அவற்றை குறை சொல்வது சரியல்ல என அன்னா கேமரூனின் பாதுகாப்பில் கோட்டை விட்டவர்களை சாடியுள்ளார்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
ஆஸ்திரேலியாவில் நன்னீர் முதலைகள், உப்புநீர் முதலைகள் என்பதுடன் கூடுதலாக இருவகை நீரிலும் வாழும் தன்மையுடைய The estuarine crocodile என்று அழைக்கப்படும் கழிமுகங்களில் வாழும் முதலைகளும் உள்ளன. இவை சுமார் 7 மீட்டர் நீளமும் 1 டன் எடைக்கு மேலும் உடையவை. இவைகளிடம் சிக்கி வருடத்திற்கு சராசரியாக 2 மனிதர்கள் உயிரிழக்கின்றனர்.
1970 ஆம் ஆண்டு இந்த வகை முதலைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆஸ்திரேலியா அரசு 'பாதுகாக்கப்பட்ட இனம்' (Protected Species) என அறிவித்ததை தொடர்ந்து இதன் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எழும்பத் துவங்கியுள்ளன.
கடந்த வாரம் மனநலம் பாதிக்கப்பட்ட 79 வயது அன்னா கேமரூன் என்ற மூதாட்டி அவரது பாதுகாப்பு நல மையத்திலிருந்து காணமல் போனார். அவரை தேடிய குவின்ஸ்லாந்து போலீஸாருக்கு போர்ட் டக்லஸின் மவ்ப்ரே ஆற்றின் கரையில் (Port Douglas Creek of Mowbrey River) அவரது கைத்தடி போன்ற சில பொருட்கள் மட்டுமே கிடைத்தன. மேலும் அந்த கழிமுகத்தில் வலைவீசி தேடியதன் விளைவாக அந்த மூதாட்டியை கொன்று தின்ற சுமார் 4 மீட்டர் நீளமடைய முதலை சிக்கியது, அதன் வயிற்றுக்குள் அன்னா கேமரூனின் உடற்பாகங்கள்.
இச்சம்பவத்தை தொடர்ந்து கருத்து தெரிவித்த அன்னா கேமரூனின் மகன் கிரைக் எக்கின்ஸ் என்பவர், முதலைகள் முதலைகளாகத் தான் வாழ்கின்றன. அவற்றின் இயற்கை தன்மைக்காக அவற்றை குறை சொல்வது சரியல்ல என அன்னா கேமரூனின் பாதுகாப்பில் கோட்டை விட்டவர்களை சாடியுள்ளார்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.