தஞ்சாவூர் மாவட்டம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தூய்மையே சேவை தொடர்பாக தூய்மை பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (02.10.2017) தொடங்கி வைத்தார்.
தூய்மை பணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகமும், பாரத வங்கி மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் கோட்பாடுகளான அகிம்சை, சகோதரத்துவம், தீண்டாமை, பெண்களுக்கு முக்கியத்துவம் போன்றவை அண்ணல் காந்தியடிகளின் கோட்பாடுகளாகும். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒட்டடை அடிக்கும் பணி, பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணி, டெங்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற தூய்மை பணிகளை செய்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சுகாதாரத்தை கடைப்பிடிப்பதன் மூலம் தூய்மையாக நாம் வசிப்பதற்கும் வழிவகுக்கும்.
முன்னதாக தூய்மை தொடர்பான தூய்மையே சேவை உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் தூய்மை பாரத தினம் 2.10.2017 அன்று நமது மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளிலும் “தூய்மையே சேவை” என்பதனை மையமாக வைத்து கட்டுரைப்போட்டி மற்றும் குறும்பட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற நபர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வட்டார அளவில் சிறந்த படைப்புகள், மாவட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அவர்களில் சிறப்பாக தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தியவர்களின் கட்டுரை போட்டி மற்றும் குறும்பட போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற நபர்களை, மாநில அளவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், 589 ஊராட்சிகளிலும் ஊக்குநர்கள், தனி நபர் இல்ல கழிப்பறை அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டு ஊராட்சி அளவில் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்த ஊக்குநர்களுக்கு சிறந்த சேவைக்கான சேவகர் நற்சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், தஞ்சாவூர் மருத்துவகல்கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயக்குமார், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.நாகராஜன், பாரத வங்கியின் தலைமை மேலாளர் பன்னீர்செல்வம், உதவி திட்ட அலுவலர் பாரதிதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பாரத வங்கியின் அலுவலர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூய்மை பணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகமும், பாரத வங்கி மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் கோட்பாடுகளான அகிம்சை, சகோதரத்துவம், தீண்டாமை, பெண்களுக்கு முக்கியத்துவம் போன்றவை அண்ணல் காந்தியடிகளின் கோட்பாடுகளாகும். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒட்டடை அடிக்கும் பணி, பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணி, டெங்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற தூய்மை பணிகளை செய்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சுகாதாரத்தை கடைப்பிடிப்பதன் மூலம் தூய்மையாக நாம் வசிப்பதற்கும் வழிவகுக்கும்.
முன்னதாக தூய்மை தொடர்பான தூய்மையே சேவை உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் தூய்மை பாரத தினம் 2.10.2017 அன்று நமது மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளிலும் “தூய்மையே சேவை” என்பதனை மையமாக வைத்து கட்டுரைப்போட்டி மற்றும் குறும்பட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற நபர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வட்டார அளவில் சிறந்த படைப்புகள், மாவட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அவர்களில் சிறப்பாக தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தியவர்களின் கட்டுரை போட்டி மற்றும் குறும்பட போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற நபர்களை, மாநில அளவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், 589 ஊராட்சிகளிலும் ஊக்குநர்கள், தனி நபர் இல்ல கழிப்பறை அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டு ஊராட்சி அளவில் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்த ஊக்குநர்களுக்கு சிறந்த சேவைக்கான சேவகர் நற்சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், தஞ்சாவூர் மருத்துவகல்கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயக்குமார், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.நாகராஜன், பாரத வங்கியின் தலைமை மேலாளர் பன்னீர்செல்வம், உதவி திட்ட அலுவலர் பாரதிதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பாரத வங்கியின் அலுவலர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.