.

Pages

Thursday, October 19, 2017

துபை - சண்டிகர் பயணிகளின் தீபாவளியை புஸ்வானமாக்கிய இன்டிகோ ஏர்லைன்ஸ்

அதிரை நியூஸ்:அக். 19
செவ்வாய் காலை துபையிலிருந்து சண்டிகருக்கு புறப்பட்ட இன்டிகோ விமான நிறுவனம் இந்தியர்களுக்கு சோகத்தை பரிசாக வழங்கியது.

எண்ணத்தில் பல்லாயிரம் வண்ணச்சுடர் கற்பனைகளுடன் தீபாவளியை உற்றார் உறவினர்களுடன் கொண்டாட புறப்பட்டவர்கள் தங்களுடன் பயணப் பொதியாக தீபாவளி கொண்டாட்டத்திற்கு தேவையான துணிமணிகள், பரிசுப் பொருட்கள் என கொண்டு சென்றனர்.

சண்டிகர் விமான நிலையத்தில் இறங்கியவுடன் தான் தெரிந்தது இன்டிகோ விமானத்தில் சுமார் 80 பயணிகளுடைய பயணப்பொதிகள் (லக்கேஜ்) துபையில் ஏற்றப்படவே இல்லை என. வந்திறங்கிய பயணிகள் பெல்ட்டில் ஒன்றரை மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தும் லக்கேஜ் வராமல் பதைபதைக்க இன்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் லக்கேஜ்கள் காணாமல் போனால் புகார் எழுதித் தரும் விண்ணப்ப படிவத்தை வழங்கி பூர்த்தி செய்து தருமாறும், லக்கேஜ் நாளை (புதன்) வருமென்றும் கூறி பயணிகளின் இரத்த அழுத்தத்தை ஏற்றினர்.

தீபாவளி பண்டிகை இன்டிகோ விமான நிறுவனத்தால் புஸ்வானமாகிப் போனாது தான் சோகம். இதேபோல் சில வருடங்களுக்கு முன் பெருநாள் கொண்டாடுவதற்காக திருச்சி வழியாக ஊருக்கு சென்றபோது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூம் நமக்கும் ஒரு கசப்பான அனுபவத்தை தந்துள்ளது, அந்த வலியை உணர்ந்துள்ளதால் நம் சக ஹிந்து சகோதரர்களுடைய வலியை உணர முடிகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.