.

Pages

Sunday, April 15, 2018

கல்லூரிப் பேராசிரியருக்கு சேவை விருது!

அதிராம்பட்டினம், ஏப்.15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் துறை இணைப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஏ.அம்சத்.

உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் 'விலங்கியல் வளங்கள்' என்ற இணையதள சேவையை தொடங்கி வழிநடத்தி வருகிறார். இவரது சேவையை பாராட்டும் வகையில், மதுரை 'மாவண்டிரிக்ஸ் டெக்னாலஜிஸ்' என்ற மென்பொருள் நிறுவனத்தின் 6-வது ஆண்டு விழாவில், 'சிறந்த ஆசிரியர் விருது' சனிக்கிழமை வழங்கப்பட்டது. விருதினை அந்நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி இன்ஜினியர் ஏ.சாதிக்பாட்சா வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

4 comments:

  1. அடுக்குத்தொடர் அத்தனையும் 
    கைக்குள் வைத்திருக்கும் ஆசிரியர் த்ஜித்தரே!

    தட்டிக் கொடுத்து சுற்றம் வளர்க்கும் பண்பாளரே!!! 

    வெளிப்படையான கருத்துக்கள் கொடுத்து எங்களை
    அண்ணாந்து பார்க்க வைத்த அன்பரே..
    தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

    சிரித்த முகத்துக்கு சொந்தக் காரர் என்றால் அது தங்களையே சாரும்

    ReplyDelete
    Replies
    1. மணிச்சுடர் நிருபர் ஷாஹுல் ஹமீது அவர்களே,

      உங்கள் ஊக்கமூட்டும் பாராட்டுகளுக்கு நன்றி.

      எல்லோருக்கும் பயன் தரக்கூடிய பண்புகளைப் பெற்று, மாணவர்கள், ஆசிரியர்கள், இந்த சமூகம் மற்றும் நம் சமுதாயம் முன்னேற பாடுபட வேண்டும் என்ற இலட்சியத்துடன் செயலாற்றிவரும் என் பணிகள் தங்களைப்போன்றும் மற்றும் அதிரை நியூஸ் நிருபர் நீஜாம் அவர்களைப்போன்றும் தொய்வில்லாமல் தொடர துஆ செய்யுங்கள்.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. களிமண்ணாய் கிடந்த மாணவனை இணைத்து அவனுக்கு உரு கொடுத்து அவனை பக்குவப்படுத்தி இந்த உலகிற்கு நல்லதொரு குடிமகனாய் வழங்கும் பெருமை ஆசியருக்கே பொருந்தும்

    அந்த வகையில் அம்ஜத்சார் அவர்கள் மாணவர்கள் மேல் அதிகமான அக்கரை கொண்டவர்கள் என்று நான் சொல்ல வில்லை இத்தலத்தில் உள்ள ஏகப்பட்ட மாணவர்கள் மனதில் நினைத்ததை நான் வெளி படுத்தி உள்ளேன்

    ஆசிரிய பெருந்தகைக்கு நன்றிகள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.