அதிரை நியூஸ்: ஏப்.15
உலகளவில் சீனாவில் தான் அதிக மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த வருடம் உலகளவில் சீனாவில் தான் மிக மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன எனினும் இம்மரண தண்டனைகளை தேசிய ரகசியம் என சீன அரசு அறிவித்துள்ளதால் உண்மையான எண்ணிக்கையை கணிக்க இயலவில்லை என ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனும் சர்வதேச பொதுமன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சீனாவிற்கு அடுத்து ஈரான், சவுதி அரேபியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கூட்டாக சுமார் 830 மேற்பட்ட மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் அந்த அறிக்கை தெரிவிப்பதாவது, 2017 ஆம் ஆண்டு சீனாவை தவிர்த்து 23 நாடுகளில் 993 மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 2016 ஆம் ஆண்டைவிட 4% குறைவாகும், 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 39% குறைவாகும்.
53 நாடுகளில் மரண தண்டனைக்கு அவசியமில்லாத குற்ற வழக்குகளின் கீழ் சுமார் 2,591 பேர் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளனர். இது கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவான 3,117 என்ற எண்ணிக்கையை விட குறைவாகும். 20 ஆப்பிரிக்க நாடுகள் மரண தண்டனைகளை கைவிட்டுள்ள நிலையில் தெற்கு சூடானும், சோமாலியாவும் மட்டுமே கடந்த வருடம் மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளன.
மரண தண்டனை வழங்கும் நாடுகளை உலகின் பிற நாடுகளிலிருந்து தனிமைப்படுத்துவது என்பது தற்போது இயலாத காரியமே என்றாலும் வருங்காலங்களில் மரண தண்டனைகளை கைவிடும் நாடுகளின் எண்ணிக்கை உயரவே வாய்ப்புள்ளது.
போதைப் பொருள் தொடர்பான வழக்குகளில் சிக்குவோருக்கு மலேஷியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படும் அதேவேளை அமெரிக்கா, ஜப்பான், மாலத்தீவு போன்றவை மரண தண்டனைகளுக்குப் பதிலாக குற்றவாளிகளை மூளைக்குறைபாடு அல்லது உடற்குறைபாடு உள்ளவர்களாக மாற்றி கொடூரமாக தண்டிப்பதையும் கவனத்தல் கொள்ள வேண்டும் எனவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு பஹ்ரைன், ஜோர்டான், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் மரண தண்டனைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தத் துவங்கியுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 21,919 பேர் மரண தண்டனையை எதிர்பார்த்தவர்களாக சிறைகளில் உள்ளனர். மரண தண்டனைகளுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதற்கு இதுவே சரியான தருணம் எனவும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
Sources: The Independent / Msn
தமிழில்: நம்ம ஊரான்
உலகளவில் சீனாவில் தான் அதிக மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த வருடம் உலகளவில் சீனாவில் தான் மிக மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன எனினும் இம்மரண தண்டனைகளை தேசிய ரகசியம் என சீன அரசு அறிவித்துள்ளதால் உண்மையான எண்ணிக்கையை கணிக்க இயலவில்லை என ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனும் சர்வதேச பொதுமன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சீனாவிற்கு அடுத்து ஈரான், சவுதி அரேபியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கூட்டாக சுமார் 830 மேற்பட்ட மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் அந்த அறிக்கை தெரிவிப்பதாவது, 2017 ஆம் ஆண்டு சீனாவை தவிர்த்து 23 நாடுகளில் 993 மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 2016 ஆம் ஆண்டைவிட 4% குறைவாகும், 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 39% குறைவாகும்.
53 நாடுகளில் மரண தண்டனைக்கு அவசியமில்லாத குற்ற வழக்குகளின் கீழ் சுமார் 2,591 பேர் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளனர். இது கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவான 3,117 என்ற எண்ணிக்கையை விட குறைவாகும். 20 ஆப்பிரிக்க நாடுகள் மரண தண்டனைகளை கைவிட்டுள்ள நிலையில் தெற்கு சூடானும், சோமாலியாவும் மட்டுமே கடந்த வருடம் மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளன.
மரண தண்டனை வழங்கும் நாடுகளை உலகின் பிற நாடுகளிலிருந்து தனிமைப்படுத்துவது என்பது தற்போது இயலாத காரியமே என்றாலும் வருங்காலங்களில் மரண தண்டனைகளை கைவிடும் நாடுகளின் எண்ணிக்கை உயரவே வாய்ப்புள்ளது.
போதைப் பொருள் தொடர்பான வழக்குகளில் சிக்குவோருக்கு மலேஷியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படும் அதேவேளை அமெரிக்கா, ஜப்பான், மாலத்தீவு போன்றவை மரண தண்டனைகளுக்குப் பதிலாக குற்றவாளிகளை மூளைக்குறைபாடு அல்லது உடற்குறைபாடு உள்ளவர்களாக மாற்றி கொடூரமாக தண்டிப்பதையும் கவனத்தல் கொள்ள வேண்டும் எனவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு பஹ்ரைன், ஜோர்டான், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் மரண தண்டனைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தத் துவங்கியுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 21,919 பேர் மரண தண்டனையை எதிர்பார்த்தவர்களாக சிறைகளில் உள்ளனர். மரண தண்டனைகளுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதற்கு இதுவே சரியான தருணம் எனவும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
Sources: The Independent / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.