அதிரை நியூஸ்: நவ.01
சவுதியில் 21 நாட்களுக்குள் தொழிலாளர் ~ ஸ்பான்சர் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண புதிய சட்டம்
சவுதி அரேபியாவின் நீதி அமைச்சகத்தின் (Ministry of Justice) புதிய உத்தரவின்படி, ஸ்பான்ஸர் தொழிலாளர் இடையே எழும் பிரச்சனைகளுக்கான தீர்வு தொழிலாளர் அலுவலகங்களால் (Labor Office) அதிகபட்சம் 21 நாட்களுக்குள் சுமூகமான முறையில் (Amicably settle) பேசித் தீர்க்கப்பட வேண்டும். 21 நாட்கள் என்ற தவணைக்குள் தீர்க்கப்படாவிட்டால் அந்த வழக்குகளை தொழிலாளர் நல நீதிமன்றங்களுக்கு ஆன்லைன் (electronically submit the case to labor courts) வழியாக மாற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் 3 வகையின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளன,
1. ஸ்பான்சர் - தொழிலாளர் இடையேயான பிரச்சனைகள்,
2. முதலாளி – வீட்டுப் பணியாளர் இடையேயான பிரச்சனை,
3. முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இருவருக்கும் பொதுவாக சமூக இன்ஷூரன்ஸ் தொடர்பில் ( General Organization for Social Insurance (GOSI) pertaining to subscription, registration and compensation) போன்றவை இடையே எழும் பிரச்சனைகள் என பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் வகை:
ஸ்பான்சார் அல்லது தொழிலாளர் எவராவது ஒருவர் தங்களுடைய வழக்கை முதலில் தொழிலாளர் அலுவலகங்களில் வழக்கை பதிவை செய்ய வேண்டும். அங்கு 21 நாட்களுக்குள் சுமூக உடன்பாடு எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சுமூக உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை எனில் அந்த வழக்குகளை ஆன்லைன் வழியாக தொழிலாளர் நீதி மன்றங்களுக்கு சட்டப்படி தீர்வு காண மாற்றப்பட வேண்டும்.
இரண்டாம் வகை:
ஸ்பானசர் அல்லது வீட்டுப் பணியாளரிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு சமரச கமிட்டி 5 நாட்களுக்குள் விசாரித்து சுமூக தீர்வு ஏற்பட உதவும். இதில் தீர்வு ஏதும் எட்டப்படாவிட்டால் அடுத்த 10 நாட்களுக்குள் சமரசக் கமிட்டியே ஒரு தீர்வை வழங்கும். எனினும், இத்தீர்வில் உடன்பாடு இல்லாத ஸ்பான்சர் அல்லது வீட்டுப் பணியாளர்கள் அப்பீல் வழக்காக தொழிலாளர் நல நீதிமன்றங்களுக்கு சமரசக் கமிட்டியின் உதவியுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
மூன்றாம் வகை:
ஸ்பான்சர் அல்லது தொழிலாளர் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் முறையான குறைதீர்ப்பு ஏஜென்ஸிகளிடம் தங்களின் முறைப்பாடுகளை வழக்காக பதிய வேண்டும். தீர்வில் திருப்தியில்லாவிட்டால் மீண்டும் அங்கேயே அப்பீல் செய்யலாம். அப்பீலிலும் தீர்வு கிடைக்காவிட்டால் தொழிலாளர் நல நீதிமன்றங்களுக்கு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.General Organization for Social Insurance (GOSI) pertaining to subscription, registration and compensation
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
சவுதியில் 21 நாட்களுக்குள் தொழிலாளர் ~ ஸ்பான்சர் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண புதிய சட்டம்
சவுதி அரேபியாவின் நீதி அமைச்சகத்தின் (Ministry of Justice) புதிய உத்தரவின்படி, ஸ்பான்ஸர் தொழிலாளர் இடையே எழும் பிரச்சனைகளுக்கான தீர்வு தொழிலாளர் அலுவலகங்களால் (Labor Office) அதிகபட்சம் 21 நாட்களுக்குள் சுமூகமான முறையில் (Amicably settle) பேசித் தீர்க்கப்பட வேண்டும். 21 நாட்கள் என்ற தவணைக்குள் தீர்க்கப்படாவிட்டால் அந்த வழக்குகளை தொழிலாளர் நல நீதிமன்றங்களுக்கு ஆன்லைன் (electronically submit the case to labor courts) வழியாக மாற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் 3 வகையின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளன,
1. ஸ்பான்சர் - தொழிலாளர் இடையேயான பிரச்சனைகள்,
2. முதலாளி – வீட்டுப் பணியாளர் இடையேயான பிரச்சனை,
3. முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இருவருக்கும் பொதுவாக சமூக இன்ஷூரன்ஸ் தொடர்பில் ( General Organization for Social Insurance (GOSI) pertaining to subscription, registration and compensation) போன்றவை இடையே எழும் பிரச்சனைகள் என பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் வகை:
ஸ்பான்சார் அல்லது தொழிலாளர் எவராவது ஒருவர் தங்களுடைய வழக்கை முதலில் தொழிலாளர் அலுவலகங்களில் வழக்கை பதிவை செய்ய வேண்டும். அங்கு 21 நாட்களுக்குள் சுமூக உடன்பாடு எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சுமூக உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை எனில் அந்த வழக்குகளை ஆன்லைன் வழியாக தொழிலாளர் நீதி மன்றங்களுக்கு சட்டப்படி தீர்வு காண மாற்றப்பட வேண்டும்.
இரண்டாம் வகை:
ஸ்பானசர் அல்லது வீட்டுப் பணியாளரிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு சமரச கமிட்டி 5 நாட்களுக்குள் விசாரித்து சுமூக தீர்வு ஏற்பட உதவும். இதில் தீர்வு ஏதும் எட்டப்படாவிட்டால் அடுத்த 10 நாட்களுக்குள் சமரசக் கமிட்டியே ஒரு தீர்வை வழங்கும். எனினும், இத்தீர்வில் உடன்பாடு இல்லாத ஸ்பான்சர் அல்லது வீட்டுப் பணியாளர்கள் அப்பீல் வழக்காக தொழிலாளர் நல நீதிமன்றங்களுக்கு சமரசக் கமிட்டியின் உதவியுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
மூன்றாம் வகை:
ஸ்பான்சர் அல்லது தொழிலாளர் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் முறையான குறைதீர்ப்பு ஏஜென்ஸிகளிடம் தங்களின் முறைப்பாடுகளை வழக்காக பதிய வேண்டும். தீர்வில் திருப்தியில்லாவிட்டால் மீண்டும் அங்கேயே அப்பீல் செய்யலாம். அப்பீலிலும் தீர்வு கிடைக்காவிட்டால் தொழிலாளர் நல நீதிமன்றங்களுக்கு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.General Organization for Social Insurance (GOSI) pertaining to subscription, registration and compensation
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.