.

Pages

Saturday, November 3, 2018

இடைத்தேர்தலில் அதிமுகவே வெற்றி பெறும்: பட்டுக்கோட்டையில் ஆர். வைத்திலிங்கம் பேச்சு!

பட்டுக்கோட்டை, நவ.03
பட்டுக்கோட்டையில் அதிமுக 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

நகர அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது:
தமிழகத்தில் காலியாகவுள்ள 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. இதில், அதிமுக வெற்றிக்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. 20 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெறும். அதுமட்டுமல்ல. அடுத்த பொதுத்தேர்தலிலும் தமிழக மக்கள் ஆதரவோடு நாம்தான் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிதான் அமையும் என்றார்.

தொடக்கத்தில், ஆர்.வைத்திலிங்கம் முன்னிலையில் பட்டுக்கோட்டை நகரம் 29, 30-வது வார்டு பகுதி பிற கட்சிகளில் இருந்து 50 பேர் விலகி அதிமுகவில் இணைந்தனர்.

தஞ்சை மக்களவை உறுப்பினர் கு.பரசுராமன், முன்னாள் எம்எல்ஏ பி.என்.ராமச்சந்திரன், மாவட்ட முன்னாள் செயலர் இரா.கார்த்திகேயன், மாவட்ட பால வளத் தலைவர் ஆர்.காந்தி, மாவட்ட ஜெ. பேரவைத் தலைவர் எஸ்.கே. உதயகுமார் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை நகரச் செயலர் சுப.ராஜேந்திரன் வரவேற்றார். நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.மாஸ்கோ நன்றி கூறினார்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.