அதிரை நியூஸ்: நவ.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்தவர் எம்.எஸ் அகமது மன்சூர் (வயது 60). கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சவுதி ரியாத் மாநகரில் உள்ள நிறுவனத்தில் எலக்ட்ரிக் டிசைனராக பணியாற்றி வந்தார். பணி ஓய்வு பெற்று தாயகம் திரும்ப உள்ளார்.
இந்நிலையில், இவருக்கு ரியாத் வாழ் அதிரை மக்கள் சார்பில் வழியனுப்பி வைக்கும் விதமாக சந்திப்பு நிகழ்ச்சி வாதி நிமர் பார்க்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவிற்கு, அதிரை பைத்துல்மால் ரியாத் கிளைத் தலைவர் எஸ்.சரபுதீன் தலைமை வகித்தார். ரியாத் வாழ் சமூக ஆர்வலர்கள் அபூ பக்கர், அகமது ஜலீல், நிஜாமுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், தாயகம் திரும்பும் எம்.எஸ் அகமது மன்சூர் அவர்களின் பல்வேறு சமூகப் பணியைப் பாராட்டி சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முடிவில், எம்.எஸ் அகமது மன்சூர் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ரியாத் வாழ் அதிரை பிரமுகர்கள் பலர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். அனைவருக்கும் விருந்து உபசரிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்தவர் எம்.எஸ் அகமது மன்சூர் (வயது 60). கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சவுதி ரியாத் மாநகரில் உள்ள நிறுவனத்தில் எலக்ட்ரிக் டிசைனராக பணியாற்றி வந்தார். பணி ஓய்வு பெற்று தாயகம் திரும்ப உள்ளார்.
இந்நிலையில், இவருக்கு ரியாத் வாழ் அதிரை மக்கள் சார்பில் வழியனுப்பி வைக்கும் விதமாக சந்திப்பு நிகழ்ச்சி வாதி நிமர் பார்க்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவிற்கு, அதிரை பைத்துல்மால் ரியாத் கிளைத் தலைவர் எஸ்.சரபுதீன் தலைமை வகித்தார். ரியாத் வாழ் சமூக ஆர்வலர்கள் அபூ பக்கர், அகமது ஜலீல், நிஜாமுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், தாயகம் திரும்பும் எம்.எஸ் அகமது மன்சூர் அவர்களின் பல்வேறு சமூகப் பணியைப் பாராட்டி சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முடிவில், எம்.எஸ் அகமது மன்சூர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.