அதிரை நியூஸ்: நவ.03
குற்றச்செயல் ஒன்றிற்காக துபையில் கடந்த 3 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார் கொலம்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவர். இவருக்கு 8 வயதில் ஒரே மகள் உள்ளார் என்பதுடன் இவரது குடும்பத்தினர் அனைவரும் கொலம்பியாவில் உள்ளனர். இவர் சமீபத்தில் இஸ்லாத்தை தழுவியதுடன் இதுவரை 10 சூராக்களை மனனம் செய்துள்ளார்.
இந்த கொலம்பிய சிறைவாசி சிறையில் ஒரு முஸ்லீமாக மிகுந்த நன்னடத்தையுடன் நடந்து கொண்டுள்ளார். இவரது மகளின் பிறந்த நாளிற்காக தானே சிறையிலுள்ள தொழிற்கூடத்தில் டீ-ஷர்ட் ஒன்றை வடிவமைத்து பிறந்தநாள் பரிசாக அனுப்பத் தீர்மானித்திருந்தார். மேலும் சிறையிலிருந்து தனது குடும்பத்தாருடன் போனில் பேச திட்டமிட்டிருந்தார்.
கடந்த 01.11.2018 வியாழன் அன்று அமீரகத்தில் கொடி நாள் மிகுந்த உற்சாகத்துடன் அமீரகத்தினரால் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினமே கொலம்பியா சிறைவாசியின் மகளின் பிறந்த நாளுமாக அமைந்தது. சிறைவாசிக்கு இன்ப அதிர்ச்சி வழங்க எண்ணிய துபை போலீஸார் கொலம்பியாவிலிருந்து அவரது மனைவி, மகள், குழந்தையின் பாட்டி ஆகியோரை தருவித்தனர்.
பெண்களுக்கான சிறை வளாகத்தில் அவரது மகளுக்கு ஒரு பிறந்த நாள் பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்ததுடன் ஏராளமான பரிசுகளையும் வழங்கியது துபை போலீஸ். அம்மகளுக்கு பிரம்மாண்ட பரிசாக சிறையிலுள்ள அவரது தந்தையை நேரில் காணும் வாய்ப்பை வழங்கினர். 3 ஆண்டுகளுக்கு பின் தந்தையும் மகளும் நேரில் சந்தித்துக் கொண்ட போது எழுந்த இன்ப அதிர்வுகளை எவரால் வர்ணிக்க இயலும்!
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
குற்றச்செயல் ஒன்றிற்காக துபையில் கடந்த 3 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார் கொலம்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவர். இவருக்கு 8 வயதில் ஒரே மகள் உள்ளார் என்பதுடன் இவரது குடும்பத்தினர் அனைவரும் கொலம்பியாவில் உள்ளனர். இவர் சமீபத்தில் இஸ்லாத்தை தழுவியதுடன் இதுவரை 10 சூராக்களை மனனம் செய்துள்ளார்.
இந்த கொலம்பிய சிறைவாசி சிறையில் ஒரு முஸ்லீமாக மிகுந்த நன்னடத்தையுடன் நடந்து கொண்டுள்ளார். இவரது மகளின் பிறந்த நாளிற்காக தானே சிறையிலுள்ள தொழிற்கூடத்தில் டீ-ஷர்ட் ஒன்றை வடிவமைத்து பிறந்தநாள் பரிசாக அனுப்பத் தீர்மானித்திருந்தார். மேலும் சிறையிலிருந்து தனது குடும்பத்தாருடன் போனில் பேச திட்டமிட்டிருந்தார்.
கடந்த 01.11.2018 வியாழன் அன்று அமீரகத்தில் கொடி நாள் மிகுந்த உற்சாகத்துடன் அமீரகத்தினரால் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினமே கொலம்பியா சிறைவாசியின் மகளின் பிறந்த நாளுமாக அமைந்தது. சிறைவாசிக்கு இன்ப அதிர்ச்சி வழங்க எண்ணிய துபை போலீஸார் கொலம்பியாவிலிருந்து அவரது மனைவி, மகள், குழந்தையின் பாட்டி ஆகியோரை தருவித்தனர்.
பெண்களுக்கான சிறை வளாகத்தில் அவரது மகளுக்கு ஒரு பிறந்த நாள் பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்ததுடன் ஏராளமான பரிசுகளையும் வழங்கியது துபை போலீஸ். அம்மகளுக்கு பிரம்மாண்ட பரிசாக சிறையிலுள்ள அவரது தந்தையை நேரில் காணும் வாய்ப்பை வழங்கினர். 3 ஆண்டுகளுக்கு பின் தந்தையும் மகளும் நேரில் சந்தித்துக் கொண்ட போது எழுந்த இன்ப அதிர்வுகளை எவரால் வர்ணிக்க இயலும்!
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.