அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவன் ஏ.எஸ் முகமது ஆத்திப் (13) த/பெ. அப்துல் சுக்கூர். இவர், அகில இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (SGFI) சார்பில், 14-வயதுக்கு உட்பட்ட தமிழக கால்பந்து அணியில் பங்கேற்கும் வீரர்களுக்கான தேர்வு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மண்டல அளவிலான கால்பந்து போட்டிகளில் வென்ற 80 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர். இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஏ.எஸ் முகமது ஆத்திப் கலந்துகொண்டு, தமிழக கால்பந்து அணிக்கு தேர்வு பெற்றுள்ளார். இதையடுத்து, இவர் வரும் நவ.26 ந் தேதி அசாமில் நடைபெறும் அகில இந்திய கால்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்துகொண்டு விளையாட உள்ளார்.
இதையடுத்து, அகில இந்திய கால்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்ற மாணவன் ஏ.எஸ் முகமது ஆத்திப் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஏ.ராஜா, ஏ.ஜெயகாந்தன் ஆகியோரை, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்கள் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் அபூபக்கர் அல்பனா 17-வயதுக்கு உட்பட்ட அகில இந்திய கால்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்துகொண்டு விளையாடியது குறிப்பிடதக்கது. கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Congratulation for Concerned Student,Mr.Jayagandan,Mr.Raja,HM & AHMs
ReplyDelete