அதிரை நியூஸ்: ஜூலை 02
ஹஜ் யாத்திரை காலம் துவங்கியதை அடுத்து கடந்த ஜூன் 17 திங்கள் முதல் இவ்வருடத்திற்கான உம்ரா விசா வழங்குதல் நிறுத்தப்பட்டது. உம்ரா விசாவுக்கான புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 2019 ஆகஸ்ட் 16 (துல்ஹஜ் 15) முதல் பெறப்படும் எனவும், தற்போது உம்ரா விசா உள்ளவர்கள் எதிர்வரும் ஜூலை 4 ஆம் தேதிக்குள் உம்ராவுக்காக சவுதிக்குள் வர வேண்டிய கெடு முடிவதாகவும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2030 வருடத்திற்குள் ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் உம்ரா விசாக்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வருடத்தில் மட்டும் சுமார் 7.5 மில்லியனுக்கு மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது ஓர் புதிய சாதனை அளவாகும். புதிய உம்ரா விசாக்கள் 5 நாட்களில் வழங்கப்படும் எனவும் இவ்விசாக்கள் மூலம் 30 நாட்கள் மட்டுமே சவுதியில் தங்க அனுமதிக்கப்படுவர்.
இவ்வருடம் 7,650,736 உம்ரா விசாக்கள் வழங்கப்பட்டதில் இதுவரை 7,393,657 பேர் உம்ரா செய்ய வருகை தந்துள்ளனர். இவர்களில் 6,550,520 பேர் விமானத்திலும், 707,955 பேர் தரை மார்க்கமாகவும், 135,182 பேர் கப்பல்களிலும் வருகை தந்துள்ளனர் என ஹஜ் மற்றும் உம்ராவுக்காக மிக அதிகமான உம்ரா பிரயாணிகள் கீழ்க்காணும் நாடுகளிலிருந்து வருகை தந்தனர்.
பாகிஸ்தான் 1,657,777 பேர்
இந்தோனேசிய 967,125 பேர்
இந்தியா 650,480 பேர்
எகிப்து 539,045 பேர்
அல்ஜீரியா 365,628 பேர்
ஏமன் 338,618 பேர்
துருக்கி 321,494 பேர்
மலேசியா 278,674 பேர்
இராக் 277,572 பேர்
ஜோர்டான் 216,165 பேர்கள்
என உம்ரா விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கப்பல்களிலும் வருகை தந்துள்ளனர் என ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
ஹஜ் யாத்திரை காலம் துவங்கியதை அடுத்து கடந்த ஜூன் 17 திங்கள் முதல் இவ்வருடத்திற்கான உம்ரா விசா வழங்குதல் நிறுத்தப்பட்டது. உம்ரா விசாவுக்கான புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 2019 ஆகஸ்ட் 16 (துல்ஹஜ் 15) முதல் பெறப்படும் எனவும், தற்போது உம்ரா விசா உள்ளவர்கள் எதிர்வரும் ஜூலை 4 ஆம் தேதிக்குள் உம்ராவுக்காக சவுதிக்குள் வர வேண்டிய கெடு முடிவதாகவும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2030 வருடத்திற்குள் ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் உம்ரா விசாக்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வருடத்தில் மட்டும் சுமார் 7.5 மில்லியனுக்கு மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது ஓர் புதிய சாதனை அளவாகும். புதிய உம்ரா விசாக்கள் 5 நாட்களில் வழங்கப்படும் எனவும் இவ்விசாக்கள் மூலம் 30 நாட்கள் மட்டுமே சவுதியில் தங்க அனுமதிக்கப்படுவர்.
இவ்வருடம் 7,650,736 உம்ரா விசாக்கள் வழங்கப்பட்டதில் இதுவரை 7,393,657 பேர் உம்ரா செய்ய வருகை தந்துள்ளனர். இவர்களில் 6,550,520 பேர் விமானத்திலும், 707,955 பேர் தரை மார்க்கமாகவும், 135,182 பேர் கப்பல்களிலும் வருகை தந்துள்ளனர் என ஹஜ் மற்றும் உம்ராவுக்காக மிக அதிகமான உம்ரா பிரயாணிகள் கீழ்க்காணும் நாடுகளிலிருந்து வருகை தந்தனர்.
பாகிஸ்தான் 1,657,777 பேர்
இந்தோனேசிய 967,125 பேர்
இந்தியா 650,480 பேர்
எகிப்து 539,045 பேர்
அல்ஜீரியா 365,628 பேர்
ஏமன் 338,618 பேர்
துருக்கி 321,494 பேர்
மலேசியா 278,674 பேர்
இராக் 277,572 பேர்
ஜோர்டான் 216,165 பேர்கள்
என உம்ரா விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கப்பல்களிலும் வருகை தந்துள்ளனர் என ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.