.

Pages

Thursday, May 1, 2014

மல்லிபட்டினம் கலவரத்தில் கைதான அனைவரும் விடுதலை !

தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேதுபாவசத்திரம் ஒன்றியத்தின் கீழ்வரும் மல்லிபட்டினம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக பிஜேபி சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட கருப்பு (எ) முருகானந்தம் தனது தொண்டர்களுடன் வருகை தந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான பொருட் சேதத்துடன் பலரும் பாதிப்படைந்தனர்.

கலவரம் தொடர்பாக மல்லிப்பட்டினம் ரகுமான்கான் (வயது 26), லாம்தீன் (30), முகமது மஜீது (32), சாகுல் ஹமீது (30), முகமது ஹபீஸ்(22), அபுபைதா (47), நவாப்கான் (37), சையது இப்ராம் (47), பசுலுல் ஹக் (67), ஹாஜா (36), பைசல்கான் (22), முகமது அஸ்கர் (26), இத்தியாக்அமீது (28), முகமது இர்பான் (28), நசுருதீன் (34), முகமது யாசின் (51), ரஸ்க்அல்லா (23), முகைதீன் சேக் (30), லுத்துபுல்லா (46) மற்றும் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த பிஸ்மில்லாகான் (27) ரகுமத்துல்லா (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில வாரங்களாக மல்லிபட்டினம் ஜமாத்தினரும், எஸ்டிபிஐ கட்சியினரும் கைதுசெய்யப்பட்டவர்களை வெளியில் கொண்டுவர கடும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இவர்களின் முயற்சிக்கு பலனளிக்கும் வகையில் சிறையில் அடைக்கப்பட்ட அனைவரும் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

கலவர பகுதிகளை மனித நேயமக்கள் கட்சியின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தஞ்சை மாவட்டதலைவர் பிஎஸ் ஹமீது ஆகியோர் தலைமையில் அந்தந்த கட்சிகளின் நிர்வாகிகள் மல்லிபட்டினத்திற்கு நேரில்சென்று ஆய்வு நடத்தி கைதானோர் வெளியே வர உதவுதாக ஜமாத்தினரிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. மல்லிபட்டினம் ஜமாத்தினர் கைதுசெய்யப்பட்டவர்களை வெளியில் கொண்டுவர உதவவில்லை. கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் முயற்சியில் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். குறிப்பிடத்தக்கது....

    ReplyDelete
  2. த.த.ஜ கூட இந்த விஷயத்தை கண்டுகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.