.

Pages

Saturday, May 3, 2014

துபாயில் நடைபெற்ற TIYA வின் பொதுக்குழு கூட்டம் [ படங்கள் இணைப்பு ]

அமீரக TIYAவின் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மகரிப் தொழுகைக்கு பிறகு சகோதரர் N.முகமது சேக்காதி அவர்கள் இல்லத்தில் TIYAவின் பொதுக்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு அமீரக TIYAவின் தலைவர் N. முகமது மாலிக் தலைமையிலும், ஏனைய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் இனிதே துவங்கியது.

சகோதரர் S,P. ஹாஜா அவர்கள் கிராத் ஓதினார். இதை தொடர்ந்து கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து தலைவர் N. முகமது மாலிக்  விளக்கி கூறினார். அதனை தொடர்ந்து TIYAவின் உறுப்பினர்களுக்கான கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு உறுப்பினர்களின் கருத்துகளும் பெறப்பட்டு, இதற்குரிய விளக்கங்களும், வாக்குறுதிகளும் பொறுப்பாளர்களால் வழங்கப்பட்டது.

இறுதியில் கீழ்காணும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்: 
1. கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டுக்கான மேலத்தெரு மஹல்லாவில் உள்ள ஏழை மாணவ மாணவிகளுக்கு சீருடை, கல்வி கட்டணம் போன்றவைகள் வழங்குவது எனவும்,

2. தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் தாயக நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் மேலத்தெரு மஹல்லாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த இந்த கல்வி ஆண்டு விடுமுறையில் உள்ள மஹல்லாவை சார்ந்த கல்லூரி மாணவர்கள் மூலம் உடனடியாக செய்து முடிப்பதற்கு தாயக TIYA நிர்வாகிகளிடம் கேட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்ட்து.

3. மேலத்தெரு மஹ்ல்லாவில் உள்ள விதவை ம்ற்றும் முதியவர்களுக்கான ஊக்க தொகையாக் மாதம் தோறும் 500ரூபாய் விதம் சுமார் 10 நபர்களுக்கு தாயக நிர்வாகிகள் வழங்கி வருகினறனர், மேலும் இவற்றை விரிவுபடுத்தும் நோக்கில் கூடுதலாக இன்னும் 10 நபர்களையும் சேர்த்துக் கொண்டு இயன்றளவில் உதவிகளை அவர்களுக்கு வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

4. மேலத்தெரு மஹல்லாவில் உள்ள அபுல் ஹோட்டல் அருகில் உள்ள பிராதன நான்கு பக்க சாலைகளின் பாலம் பழுதடைந்து இருப்பதாகவும் இன்னும் சில இடங்களில் இது போன்று ஏற்பட்டு உள்ள பிரச்சனைகளை சரி செய்வதற்க்கு 16, 17வது வார்டு உறுப்பினர்களிடம் அதிரை பேரூராட்சி தலைவரிடமும் இது தொடர்பாக அமீரக TIYAவின் மூலம் ஒரு கோரிக்கை மனு ஒன்று அனுப்பி வேண்டுகோள் வைப்பதென தீர்மானிக்கப்பட்டது.

5. நமதூரை சார்ந்த மூன்று மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற G.R. பப்ளிகேஷன் ஆங்கில தேர்வு எழுதி முதல் மூன்று இடங்களை பிடித்து நமதூருக்கு பெருமை சேர்த்துதந்த மாணவிகளை நாம் பாராட்டியாக வேண்டும் 100க்கு 98 மதிப்பென் எடுத்து முதலாம் இடம் பிடித்து  கோல்டு மெடல் வாங்கியுள்ளார், 100க்கு 96 மதிப்பென் எடுத்து இரண்டாம் இடமும், 100க்கு 94 மதிப்பென் எடுத்து மூன்றாம் இடமும் பிடித்துள்ள இந்த மூன்று மாணவிகளையும் TIYAவின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். குறிப்பு இரண்டாம் இடமும், மூன்றாம் இடமும் பிடித்துள்ள மாணவிகள் இருவரும் மேலத்தெரு மஹல்லாவை சார்ந்தவர்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த மூன்று மாணவியையும் பாராட்டும் விதமாக இனிவரும் காலங்களில் மேலும் பல சாதனைகளை மாணவர்களும் மாணவிகளும் பெற்று நமதூருக்கு பெருமையை சேர்த்துதர வேண்டுமென்று இந்த மாணவிகள் மேலும் பல சாதனை படைக்க வேண்டுமென்று நோக்கில் TIYAவின் சார்பாக சாதனை படைத்த மாணவிகளுக்கு மேலும் ஊக்கம் கொடுக்கும் விதமாக மூன்று மாணவிகளுக்கும் TIYA சார்பில் பரிசு வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

கூட்டம் துவாவுடன் இனிதே நிறைவுபெற்றது.

என்றும் அன்புடன்,
அமீரக TIYA தலைவர் மற்றும் நிர்வாகிகள்











4 comments:

  1. மாஷா அல்லாஹ்..

    பொதுகுழு ஆரம்பிக்கும் முன்பு ஒரு சஹாபிஉடைய வாழ்க்கை வரலாற்றை பற்றி சிறிய சொற்பொழிவு நிகழ்த்தினால் எதிர்கால தலைமுறையை நல்லபடியாக வார்தெடுக்கலாம்..


    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    என் சமுதாயத்தினரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே. பிறகு, (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்துவரும் தலைமுறையினர் ஆவர். அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வரும் தலைமுறையினர் ஆவர். பிறகு, உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் (வர) இருக்கிறார்கள். அவர்கள், தங்களிடம் சாட்சியம் சொல்லும்படி கேட்கப்படாமலேயே சாட்சியம் சொல்வார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்; (மக்களின்) நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.
    Volume :4 Book :62
    Buhari : 3650.

    ReplyDelete
  2. நோக்கம் நல்லது செயல்பாடுகளில் மார்க்கத்திற்க்கு முன்னுரிமை இருக்க வேண்டும். ஸஹீஹுல் புகாரி 26. 'செயல்களில் சிறந்தது எது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்றார்கள். 'பின்னர் எது?' என வினவப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள். 'பின்னர் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அங்கீகரிக்கப்படும் ஹஜ்' என்றார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    Volume:1,Book:2. ஸஹீஹுல் புகாரி 54. 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் கட்டளைக்கேற்ப அமையுமோ அவரின் ஹிஜ்ரத்தை அவ்வாறே அல்லாஹ் கருதுவான். மேலும் ஒருவரின் ஹிஜ்ரத் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணந்து கொள்வார். எனவே இவர்களின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அதுவாகவே அமைந்து விடுகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர்(ரலி) அறிவித்தார்.
    Volume:1,Book:2.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்..

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.