செய்தியை காண்க :
'இருதய நோயால் உயிருக்கு போராடும் அதிரை சகோதரிக்கு உதவிடுவீர் !
என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியை வாசித்த நல்லுள்ளம் படைத்த சகோதரர்கள் இந்த ஏழை சகோதரியின் இருதய அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி அனுப்பி வருகின்றனர்.
இதில் சமூக ஆர்வலரும், அமெரிக்காவில் வசித்து வரும் நமதூர் புதுமனை தெருவை சேர்ந்த U. பர்கத் அவர்கள், வழக்கறிஞர் அப்துல் முனாப் அவர்களிடம் ரூபாய் 15,000/- த்தை அனுப்பி சகோதரியின் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்த கேட்டுக்கொண்டார். அதன்படி இன்று காலை வழக்கறிஞர் அப்துல் முனாப் அவர்களின் முன்னிலையில் சகோதரியின் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை அடையாறு மருத்துவமனையில் கடந்த 25-08-2014 அன்று இருதய வாழ்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டு இறைவனின் கருணையால் நலமுடன் வீடு திரும்பியுள்ளார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
சகோதரியின் சிகிச்சைக்காக இதுவரையில் ரூபாய் 132,500/- குடும்பத்தினரிடம் வந்தடைந்துள்ளது. உதவி வழங்கிய அனைத்து சகோதரர்களுக்கும் நன்றியையும் துவாவையும் தெரிவித்துக்கொள்வதாக சகோதரியின் குடும்பத்தினர் நம்மிடம் தெரிவித்தனர்.
குறிப்பு : இதுவரையில் சகோதரியின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்ட உதவிகள் குறித்த தகவல்கள் நன்றி அறிவிப்போடு விரைவில் தளத்தில் வெளியிடப்படும்.
U.Barakath...........Masha Allaah ..........You are Great .
ReplyDelete