.

Pages

Saturday, September 13, 2014

அதிரையின் எந்த பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ள ஹவ்தின் ( அகல் ) புகைப்படங்கள் இது ?

அதிரையின் பல்வேறு பொக்கிஷங்கள் காணப்பட்டு வந்தாலும் அதில் கம்பீரமாக காட்சியளிக்கும் பள்ளிவாசல்களே முதன்மையானதாக இருந்து வருகிறது. அதிரை பகுதிகளில் மொத்தம் 29 பள்ளிவாசல்கள் காணப்படுகிறது. இதில் ஒவ்வொன்றிலும் ஹவ்த் ( அகல் ) அமைக்கப்பட்டிருக்கும். இதில் சுத்தமான் நீர் நிரப்பட்டு, அதில் மீன்கள் பாசிகள் இடப்பட்டு கண்ணை கவரும் விதத்தில் பளபளப்பாகவும், குளுமையானதாகவும் காட்சியளித்துக்கொண்டிருக்கும்.

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான தொழுகையை தினமும் நிலை நிறுத்திக்கொள்ளவதற்கு முன்பு தம்மை தூய்மைப்படுத்தி கொள்வது ஒவ்வொரு தொழுகையாளிக்கும் அவசியமாக இருந்து வருகிறது. இதற்காக அகலில் நிரப்பட்ட தண்ணீரில் கை, கால்கள் முகம், வாய், தலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை சுத்தப்படுத்திக்கொள்ள உதவுகிறது. இதனால் ஹவ்து சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.

சரி விசயத்திற்கு வருவோம்...
இங்கே இணைக்கப்பட்டுள்ள ஹவ்தின் ( அகல் ) படங்கள் அதிரையில் உள்ள பள்ளிவாசல்களில் ஒன்றில் எடுக்கப்பட்டது. இது எந்த பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ள ஹவ்தின் ( அகல் ) புகைப்படம் ?

சரியான விடைகளை கருத்துரை ( கமெண்ட்ஸ் ) பகுதியில் பதியவும்...

15 comments:

  1. இது புதுப்பள்ளிக்கு சொந்தமானது.‎

    By:-‎
    JMMA International General Consultancy & Services.‎
    All kind of documents work.‎
    Web Designing.‎
    Flight Ticket Booking.‎
    All India Railway Ticket Booking.‎

    For any other enquiry, please contact us.‎
    jmmaigcs@gmail.com ‎

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    கேள்விக்கும் நன்றி.‎

    அருமையான கேள்வி.‎

    ஒரே பள்ளிக்கு போய் வருவதால், இது எந்த பள்ளியில் உள்ளது என்று ‎என்னால் சொல்லமுடியாது.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. இதனால் என்ன பயன் இருக்கின்றன,எந்தெந்த பள்ளியில் இறையச்சம்(அத்தஹ்வா) உள்ளன அதற்க்கு என்ன அழவுகோள் என்றால் பயனாக இருக்கும் , யார் நிர்வாகம், யார் நிர்வகிக்க தகுதியானவர்கள்?

    பிஸ்மில்லாஹ்ஹிற்றஹ்மான்னிற்றஹீம்
    إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ
    அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள். 9:18

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.