.

Pages

Tuesday, September 2, 2014

சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகை !

11-ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு அந்தந்த கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிப் படிப்பை தொடர வசதியில்லாத சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத் திட்டத்தின் கீழ் மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சிகள் மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவ 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ.12 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் 10-ஆம் வகுப்பில் 55 சதவிகிதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 11-ஆம் வகுப்பு படிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்துக்கும் உள்பட்டு இருக்க வேண்டும்.

தகுதியுள்ள மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து அந்தந்த கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம், உறுதிமொழி ஆவணம் மற்றும் விபரக் குறிப்பை http://maef.nic.in/ என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் சரிபார்த்து, செப்.30-ஆம் தேதிக்குள் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இது மாணவச் செல்வங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு. மேலும் ‎இதுவிஷயமாக படிவங்கள்(Documents), ஆவணங்கள்(Applications) பூர்த்தி ‎செய்தல், கணினியில் டைப் செய்தல், நகல் எடுத்தல், போன்ற உதவிகள் ‎தேவைப்படுவோர் என்னை தொடர்பு கொள்ளலாம்.‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com
    மொபைல் – 75 02 87 07 67 ‎

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.