.

Pages

Thursday, March 16, 2017

தஞ்சை மாவட்டத்தில் உயிரிழந்த 9 விவசாய குடும்பத்தினருக்கு ரூ 27 லட்சம் நிவாரணம் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 9 விவசாய குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.3 இலட்சம் வீதம் ரூ.27 இலட்சத்திற்கான காசோலை மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (15.03.2017) வழங்கினார்.

தமிழ் நாட்டில் வறட்சி பாதிப்பு காரணமாக அதிர்ச்சியில் விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து விரிவான அறிக்கையை அளிக்க அரசு கோரியது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்பட்ட இறப்புகள் சம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், வயோதிகம், குடும்ப சூழ்நிலை, சம்பந்தப்பட்டவரின் உடல்நிலை, போன்ற காரணங்களினால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்தது.

எனினும் உயிரிழந்த நபர்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அக்குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு, மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தது.  மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று, மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த 9  நபர்களின் குடும்பங்களுக்கு தலா 3 இலட்சம் ரூபாய் வீதம், நிவாரணமாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில், நாஞ்சிக்கோட்டை சரகம், சூரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் (வயது 55) என்பவருக்காக அவரது மனைவி முருகேஸ்வரி, பட்டுக்கோட்டை வட்டம்,  தம்பிக்கோட்டை வடகாடு, செட்டிகுட்டை காலனியைச் சேர்ந்த நாராயண செட்டியர் (வயது 61) என்பவருக்காக அவரது மனைவி முத்துலெட்சுமி, பூதலூர் வட்டம், அகரப்பேட்டை சரகம், ரெங்கநாதபுரம் கிராமம், ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 72) என்பவருக்கு அவரது மனைவி காவேரியம்மாள், பாபநாசம் வட்டம், சாலியமங்கலம் சரகம், ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் (வயது 40) என்பவருக்காக அவரது மனைவி கவிதா, பாபநாசம் வட்டம், மெலட்டூர் சரகம், விழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (வயது 70) என்பவருக்காக அவரது மனைவி ரெத்தினம், தஞ்சாவூர் வட்டம், வல்லம் சரகம், திருமலைசமுத்திரம் கிராமம், வடக்குத் தெருவைச் சேர்ந்த சசிகுமார் (வயது 42) என்பவருக்காக அவரது மனைவி ராஜலெட்சுமி, திருவிடைமருதூர் வட்டம், கதிராமங்கலம் கருப்பூர் கிராமம், கீழகுடியான தெருவைச் சேர்ந்த பூமிநாதன் (வயது 30) என்பவருக்கு அவரது தாயார் ஆதிலெட்சுமி, தஞ்சாவூர் வட்டம், ஆலங்குடி முதன்மை கிராமம், தெற்கு இரண்டாவது தெருவைச் சேர்ந்த முருகானந்தம் (வயது 34) என்பவருக்காக அவரது மனைவி புனிதா, திருவையாறு வட்டம், கண்டியூர் சரகம், கீழதிருப்பந்துருத்தி கிராமம், செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (வயது 42), என்பவருக்காக அவரது மனைவி சாவித்திரி ஆகிய 9 குடும்பங்களுக்கு இன்று (15.3.2017) தலா 3 லட்சம் என மொத்தம் ரூ.27,00,000 க்கான காசோலை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்களால் வழங்கப்பட்டது..

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கணேசன், வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணகுமார் மற்றும் வேளாண்மைத் துறை உதவி இயக்குநர்கள், வட்டாட்சியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.