.

Pages

Thursday, March 16, 2017

துபாயில் பூனையை கொன்று நாய்க்கு உணவாக்கிய 3 பேருக்கு வினோத தண்டனை!

அதிரை நியூஸ்: மார்ச்-16
துபையில் சமீபத்தில் பூனை ஒன்று கொடூரமாக கொல்லப்பட்டு நாய்க்கு உணவாக்கப்படும் வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான கண்டனங்களும் சுனாமிப் பேரலைகள் போல் எழுந்தன.

இந்த சம்பவம் பற்றி அறிந்த துபை ஆட்சியாளர் ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள், 3 குற்றவாளிகளும் 3 மாத காலத்திற்கு தினமும் 4 மணிநேரம் துபை மிருகக்காட்சி சாலையை சுத்தப்படுத்தும் சமூகப்பணியை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

குற்றவாளிகளுக்கு இதுபோல் விதிக்கப்படும் வினோத தண்டனைகள் பிறருக்கு பாடமாக அமைய வேண்டும். மிருகங்களை இம்சித்து ரசிக்கும் குரூர புத்தி ஒழிய வேண்டும்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

1 comment:

  1. முன்பெல்லாம் நம் ஊரிலும் குறவர்கள் பூனையே ஈட்டியால் குத்தி தின்றார்கள்.பூனை குத்தி கொல்லை என்ற பெயரில் ஒரு ஊரும் உண்டு

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.