துபையில் சமீபத்தில் பூனை ஒன்று கொடூரமாக கொல்லப்பட்டு நாய்க்கு உணவாக்கப்படும் வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான கண்டனங்களும் சுனாமிப் பேரலைகள் போல் எழுந்தன.
இந்த சம்பவம் பற்றி அறிந்த துபை ஆட்சியாளர் ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள், 3 குற்றவாளிகளும் 3 மாத காலத்திற்கு தினமும் 4 மணிநேரம் துபை மிருகக்காட்சி சாலையை சுத்தப்படுத்தும் சமூகப்பணியை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
குற்றவாளிகளுக்கு இதுபோல் விதிக்கப்படும் வினோத தண்டனைகள் பிறருக்கு பாடமாக அமைய வேண்டும். மிருகங்களை இம்சித்து ரசிக்கும் குரூர புத்தி ஒழிய வேண்டும்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
முன்பெல்லாம் நம் ஊரிலும் குறவர்கள் பூனையே ஈட்டியால் குத்தி தின்றார்கள்.பூனை குத்தி கொல்லை என்ற பெயரில் ஒரு ஊரும் உண்டு
ReplyDelete