.

Pages

Wednesday, March 1, 2017

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகள் மு்லம் பயனாளிகளுக்கு அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு. தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக மின்னனு அட்டை (Smart Card ) வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்திட உள்ளது,  அதற்காக. குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்கள் மற்றும் கைபேசி எண் விவரங்கள் தொடர்புடைய நியாயவிலை அங்காடிகளில் உள்ள விற்பனை முனையக் கருவியில் (POS) பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.  

இதில் இன்றளவும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்கள் மற்றும் கைபேசி எண்களை இணைக்காதவர்கள் உடனடியாக தங்களது பகுதியிலுள்ள தொடர்புடைய நியாயவிலை அங்காடிக்குச் சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும்.

சென்னை. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் இணையத்தளம் வழியாக www.tnpds.com
என்ற இணையத்தில் பயனாளர் நுழைவு என்ற இடத்தில் குடும்ப அட்டையுடன் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண்ணை உள்ளீடு செய்தால் 7 எண்கள் கொண்ட OTP (one time password ) தங்களுடைய கைபேசியில் பதிவாகும்,  அந்த எண்களை இணையத்தில் குறிப்பிட்ட பகுதியில் உள்ளீடு செய்யவும்,  அதன் பின்னர்.  பெரியவர்களுக்குரிய ஆதார் அட்டையினையும். சிறியவர்களுக்குரிய (5 வயதுக்குட்பட்டவர்கள்) பிறப்பு சான்றினையும் (Birth  Certificate ) Scan செய்து அனுப்பும் பட்சத்தில். அவர்களுடைய விவரங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும்,  இதன் மு்லம் அனைத்து நபர்களின் விவரங்கள் அடங்கிய மின்னனு அட்டை (Smart Card) தங்களுக்கு கிடைக்கப்பெறும்.
                                     
குடும்ப அட்டை வைத்துள்ள அனைவரும் தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவரின் கைபேசி எண்ணை கட்டாயம் பதிவு செய்திருக்கவேண்டும்,  அவ்வாறு கைபேசி எண் பதிவு செய்துள்ள உங்களுக்கு நீங்கள் நியாயவிலை அங்காடி மு்லம் வாங்குகின்ற பொருட்களுக்கான விபரம் உங்களுடைய கைபேசியில் குறுஞ்செய்தியாக (SMS) வரப்பெறும்,  அப்படி நீங்கள் வாங்காத பொருட்களுக்கு வாங்கியதாக குறுஞ்செய்தி (SMS) வந்தால். உடனே PDS (SPACE) 107 என டைப் செய்து 9980904040 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு. அதன் விபரம் உங்களுக்கு தெரியப்டுத்தப்படும்.

குடும்ப அட்டைதாரர்கள் கைபேசி எண் பதிவுசெய்து. அத்தியாவசியப்பொருட்கள் வாங்கியவுடன் குறுஞ்செய்தி (SMS) வரவில்லையெனில். தொடர்புடைய நியாயவிலை அங்காடியில் பதிவாகியுள்ள கைபேசி எண்ணை சரிபார்த்து. தவறு எனில். சரி செய்து கொள்ளுமாறு  தஞ்சாவூர். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை. கேட்டுக்கொண்டுள்ளார்.             

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.