.

Pages

Wednesday, March 1, 2017

பட்டுக்கோட்டையில் கருவூல அலுவலகத்தை முற்றுகையிட்டு விஏஓக்கள் போராட்டம் !

பட்டுக்கோட்டை, மார்ச், 1:
பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் என மொத்தம் 400 பேருக்கு பிப்ரவரி மாத சம்பளம் வழங்காததைக் கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் புதன்கிழமை மாலை பட்டுக்கோட்டை சார்நிலை கருவூல அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பட்டுக்கோட்டை வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத் தலைவர் வீரமணி தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் லெட்சுமிநாராயணன், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிப்ரவரி மாத சம்பளம் வழங்காததைக் கண்டித்து கருவூல அலுவலருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி, சுமார் 2 மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் ஆர்.கோவிந்தராசு முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் மார்ச் 2-ம் தேதி (வியாழன்) மாலைக்குள் மின்னணு பரிமாற்றத்தின் மூலம் 400 பேருக்கும் சம்பளம் அனுப்பப்படும் என்று கருவூல அதிகாரி பாலகிருஷ்ணன் உறுதியளித்தார். இதையடுத்து விஏஓக்கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.