.

Pages

Wednesday, March 1, 2017

துபாய் 'ரெண்ட் ஏ கார்' வாடகை கார் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு !

அதிரை நியூஸ்: மார்ச்-01
துபையில் 'ரெண்ட் எ கார்' (Rent A Car) என்றழைக்கப்படும் நாள் வாடகை கார்களை இயக்கும் நிறுவனங்கள் பல செயல்படுகின்றன. இவற்றிற்கு புதிய கட்டுப்பாடுகளை துபை போக்குவரத்து துறை (RTA) விதித்துத்துள்ளது.

கார்களை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து பாஸ்போர்ட், தேசிய அடையாள அட்டை (ID) போன்ற தனிப்பட்ட ஆவணங்களை பெறக்கூடாது.

கார் வாடகைக்கு விடும் நிறுவனங்கள் தங்களுடைய வாகனங்களை பொது பார்க்கிங் நிறுத்தக்கூடாது மாறாக தங்களுக்கு சொந்தமான பார்க்கிங் அல்லது கேரேஜ்களில் மட்டுமே நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறுபவர்களின் லைசென்ஸ் முடக்கப்படும்.

புதிதாக கார் வாடகை நிறுவனம் ஆரம்பிப்போரிடம் குறைந்தது 10 வாகனங்களாவது இருத்தல் வேண்டும் மேலும் அதே நிறுவனத்தின் கிளை அலுவலகங்களில் 3 வாகனங்களாவது இருத்தல் வேண்டும். 6 லட்சம் திர்ஹம் மற்றும் அதற்கு மேல் மதிப்புடைய வாகனங்களை வைத்திருப்போர் குறைந்தது 5 வாகனங்காளவது வைத்திருக்க வேண்டும் என்பது உட்பட பல புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.