.

Pages

Tuesday, March 14, 2017

சவூதியில் தீ விபத்தில் சிக்கிய குடும்பத்தை காப்பாற்றிய லாரி ஓட்டுனருக்கு இளவரசர் பாராட்டு !

அதிரை நியூஸ்: மார்ச்-14
சவுதியில் நடைபெற்ற ஒரு விபத்தை தொடர்ந்து வாகனம் தீப்பற்றி எரிந்தது. அந்த வாகனத்திற்குள் குடும்பம் ஒன்று சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததை கண்ட தண்ணீர் லாரியின் டிரைவர் ஒருவர் தன்னந்தனியாக செயலில் குதித்து அந்தக் குடும்பத்தை உயிருடன் மீட்டதுடன் தன்னுடைய டேங்கரிலிருந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்து காயம்பட்டவர்களுக்கு தன்னால் இயன்ற முதலுதவிகளையும் செய்தார்.

இந்த அரிய வீரதீரச் செயலில் ஈடுபட்ட முஹமது என்ற பாகிஸ்தானி டிரக் டிரைவரை கிழக்கு மாகாண கவர்னர் இளவரசர் சவூது பின் நாயிப் அவர்கள் கவர்னர் மாளிகைக்கு அழைத்து அன்பளிப்பு மற்றும் புனித மக்கா நகருக்குச் சென்று புனித கடமையை நிறைவேற்றுவதற்கான சிறப்பு அனுமதியையும் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில், அன்பளிப்பும் கௌரவமும் வழங்கப்பட்டாலும் முக்கியமான சமூக அவலம் ஒன்றும் கவலையுடன் சுட்டிக்காட்டப்பட்டது. இன்றைய சமுதாயத்தினர் இதுபோல் அவசர உதவிகள் தேவைப்படும் சூழல்களில் உதவ முன்வராமல் 'செல்ஃபி' எடுத்து தங்களின் நண்பர்களுடன் பகிர்வதையே வழக்கமாக்கி கொண்டுள்ளனர், அவர்களிலிருந்து இந்த முஹமது வித்தியாசமானவர் என்றும் பிறருக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார் எனவும் பாராட்டப்பட்டார்.

Sources: Sabq / Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.