தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ் முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை சார்பில் முத்தமிழ் விழா செவ்வாய்க்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
கல்லூரி சார்பில் நடந்த வினாடி வினாப் போட்டியில் கணிதவியல் முதுகலை இறுதியாண்டு மாணவி ரா.சுவைபா கலந்துகொண்டு முதலிடம் பிடித்தார். விழாவில் இம்மாணவிக்கு நினைவுப்பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
வினாடி வினாப் போட்டிகளில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதல் இடம் பிடித்து சாதனை நிகழ்த்தி வரும் இம்மாணவிக்கு கல்லூரி முதல்வர் ஏ. எம் உதுமான் முகையதீன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அருகில் முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், காரைக்குடி அரசு கலைக்கல்லூரி தமிழ் உயராய்வு மையம், பேராசிரியர் மா. சிதம்பரம், தமிழ்த்துறை தலைவர் அ. கலீல் ரஹ்மான், விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே. நீலகண்டன் ஆகியோர் உள்ளனர்.
இம்மாணவி அதிராம்பட்டினம் தரகர் தெருவை சேர்ந்தவர் ஆவார்.
வாழ்த்துகள்
ReplyDeleteநாங்கள் பெருமை படுகிறோம் .வாழ்த்துக்கள் பெண் இனத்தின் பெருமையே .
ReplyDelete