.

Pages

Tuesday, March 14, 2017

காதிர் முகைதீன் கல்லூரி அதிரை மாணவிக்கு முதல்வர் பாராட்டு !

அதிராம்பட்டினம், மார்ச்-14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ் முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை சார்பில் முத்தமிழ் விழா செவ்வாய்க்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கல்லூரி சார்பில் நடந்த வினாடி வினாப் போட்டியில் கணிதவியல் முதுகலை இறுதியாண்டு மாணவி ரா.சுவைபா கலந்துகொண்டு முதலிடம் பிடித்தார். விழாவில் இம்மாணவிக்கு நினைவுப்பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

வினாடி வினாப் போட்டிகளில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதல் இடம் பிடித்து சாதனை நிகழ்த்தி வரும் இம்மாணவிக்கு கல்லூரி முதல்வர் ஏ. எம் உதுமான் முகையதீன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அருகில் முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், காரைக்குடி அரசு கலைக்கல்லூரி தமிழ் உயராய்வு மையம், பேராசிரியர் மா. சிதம்பரம், தமிழ்த்துறை தலைவர் அ. கலீல் ரஹ்மான், விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே. நீலகண்டன் ஆகியோர் உள்ளனர்.

இம்மாணவி அதிராம்பட்டினம் தரகர் தெருவை சேர்ந்தவர் ஆவார்.

2 comments:

  1. நாங்கள் பெருமை படுகிறோம் .வாழ்த்துக்கள் பெண் இனத்தின் பெருமையே .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.