.

Pages

Sunday, July 9, 2017

தஞ்சாவூர் மாவட்டத்தில்: இளம் வாக்காளர்களைச் சேர்க்க இன்று சிறப்பு முகாம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் இளம் வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
சிறப்புப் பணி செயலாக்கம் மூலம் தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளைக் களைதல் பணிகளை ஜுலை 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை மேற்கொள்ளுமாறு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக 18 - 19 வயதுக் குழுமத்தைச் சேர்ந்த இளம் வாக்காளர்களைப் பட்டியலில் சேர்ப்பதற்குத் தற்போது நடைபெறும் தொடர் திருத்தக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இச்சிறப்புப்பணி செயலாக்கத்தின்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுடைய அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு அருகில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களுக்குச் சென்று உரிய படிவங்களைப் பெற்று நிறைவு செய்து அளிக்கலாம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் (ஜூலை 9), ஜூலை 23-ஆம் தேதியும் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இந்த முகாம் நடைபெறும் நாள்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணிபுரிவர்.
பொதுமக்கள் இரு சிறப்பு முகாம்களின்போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அருகிலுள்ள வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்கவோ, திருத்தம் மேற்கொள்ளவோ அல்லது இறந்த தங்கள் உறவினர் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யவோ தொடர்புடைய வாக்கு சாவடி நிலை அலுவலர்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.