அதிரை நியூஸ்: நவ.01
கத்தார் நாட்டில் ரெஸிடென்ஸி விசாவின் கீழ் இருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டுமானால் ஸ்பான்சரின் அனுமதி பெற்று எக்ஸிட் விசா (Exit Visa Stamp) எனும் வெளியேறுவதற்கான விசாவையை அடித்தபின் தான் வெளியேற வேண்டும் என்றிருந்த நடைமுறை முடிவுக்கு வந்தது எனினும் உயர்மட்ட பொறுப்புக்களில் உள்ள சுமார் 5 சதவிகித ஊழியர்களுக்கு மட்டும் பழைய நடைமுறையே தொடரும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் சுமார் 2 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கத்தாரின் பல தொழிலாளர் சட்டங்கள் நவீன கால அடிமைத்தனத்தை பிரதிபலிக்கின்றன என்ற குற்றச்சாட்டு நிலவிவந்த நிலையில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெறவுள்ளதை வைத்து The International Trade Union Confederation போன்ற அமைப்புக்கள் கத்தாருக்கு அழுத்தம் கொடுத்து வந்ததை தொடர்ந்து தொழிலாளர் விஷயத்தில் 3 ஆண்டுகளுக்குள் பல்வேறு சீர்திருத்தங்களை செய்திட ஒப்புக்கொள்ளும் ஒப்பந்தம் ஒன்றை ஐ.நா.சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (UN's International Labour Organization) 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் செய்திருந்தது.
மேலும் குறைந்தபட்சம் 750 கத்தார் ரியால்கள் மற்றும் வாழ்விட வசதிகளை செய்துதர வேண்டும் என்ற ஒப்பந்தம் ஒன்றும் எட்டப்பட்டுள்ளது என்றாலும் இந்த சம்பள விகிதத்தை மேலும் உயர்த்த பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் The International Trade Union Confederation வைத்துள்ளது.
Source: economictimes.indiatimes.com
தமிழில்: நம்ம ஊரான்
கத்தார் நாட்டில் ரெஸிடென்ஸி விசாவின் கீழ் இருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டுமானால் ஸ்பான்சரின் அனுமதி பெற்று எக்ஸிட் விசா (Exit Visa Stamp) எனும் வெளியேறுவதற்கான விசாவையை அடித்தபின் தான் வெளியேற வேண்டும் என்றிருந்த நடைமுறை முடிவுக்கு வந்தது எனினும் உயர்மட்ட பொறுப்புக்களில் உள்ள சுமார் 5 சதவிகித ஊழியர்களுக்கு மட்டும் பழைய நடைமுறையே தொடரும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் சுமார் 2 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கத்தாரின் பல தொழிலாளர் சட்டங்கள் நவீன கால அடிமைத்தனத்தை பிரதிபலிக்கின்றன என்ற குற்றச்சாட்டு நிலவிவந்த நிலையில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெறவுள்ளதை வைத்து The International Trade Union Confederation போன்ற அமைப்புக்கள் கத்தாருக்கு அழுத்தம் கொடுத்து வந்ததை தொடர்ந்து தொழிலாளர் விஷயத்தில் 3 ஆண்டுகளுக்குள் பல்வேறு சீர்திருத்தங்களை செய்திட ஒப்புக்கொள்ளும் ஒப்பந்தம் ஒன்றை ஐ.நா.சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (UN's International Labour Organization) 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் செய்திருந்தது.
மேலும் குறைந்தபட்சம் 750 கத்தார் ரியால்கள் மற்றும் வாழ்விட வசதிகளை செய்துதர வேண்டும் என்ற ஒப்பந்தம் ஒன்றும் எட்டப்பட்டுள்ளது என்றாலும் இந்த சம்பள விகிதத்தை மேலும் உயர்த்த பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் The International Trade Union Confederation வைத்துள்ளது.
Source: economictimes.indiatimes.com
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.