அதிராம்பட்டினம், நவ.01-
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டது
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் கீழத்தோட்டம் மீனவர்கள் புதன்கிழமை அன்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் வலையில் விசித்திரமான எடை அதிகமான ஏதோ ஒன்று சிக்கியது. ராட்சத மீன் கிடைத்திருக்கலாம் என மகிழ்ச்சியோடு, வியாழக்கிழமை அதிகாலை கரை திரும்பிய மீனவர்களுக்கு, தங்கள் வலையில் சிக்கியது கடல் பசு என தெரியவந்தது.
மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி வன உயிர்க்கோளப்பகுதியில் அதிகமாக காணப்படும் இந்த அபூர்வ வகை கடல்பசுக்களை பிடிப்பது, அரசால் தடைசெய்யப்பட்டதாகும். அவ்வாறு பிடிபடும் கடல்பசுக்களை மீண்டும் உயிரோடு மீனவர்கள் கடலில் விட்டு விடுவது வழக்கமாகும். இதுகுறித்து தமிழ்நாடு வனத்துறை மற்றும் இந்திய வன உயிர் நிறுவனம் சார்பில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கடல்பசு வலையில் சிக்கியதையடுத்து ராஜாமடம் கீழத்தோட்டம் மீனவர்கள் தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் குருசாமிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் எம்.பி.மோகன், இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் மதுமகேஷ், ருக்மிணி சேகர் மற்றும் ஓம்கார் பவுண்டேசன் நிர்வாகிகள் டாக்டர் பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் அன்பு, கடல் பசு நண்பர்கள், மீனவர்கள் ஒருங்கிணைந்து கடல்பசுவை ஆழமான பகுதிக்கு சென்று விடுவித்தனர்.
மீனவர்கள் வலையில் சிக்கிய கடல்பசு சுமார் 10 அடி நீளமும், 500 கிலோ எடை கொண்டதாகவும் உள்ள பெண் கடல் பசுவாகும். இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல் ஒரு கடல்பசு மீனவர்கள் வலையில் சிக்கி, பின்னர் உயிரோடு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக வனத்துறை மற்றும் இந்திய வன உயிர் நிறுவனம் சார்பில் மீனவர்களுக்கு ரூ 10 ஆயிரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டது
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் கீழத்தோட்டம் மீனவர்கள் புதன்கிழமை அன்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் வலையில் விசித்திரமான எடை அதிகமான ஏதோ ஒன்று சிக்கியது. ராட்சத மீன் கிடைத்திருக்கலாம் என மகிழ்ச்சியோடு, வியாழக்கிழமை அதிகாலை கரை திரும்பிய மீனவர்களுக்கு, தங்கள் வலையில் சிக்கியது கடல் பசு என தெரியவந்தது.
மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி வன உயிர்க்கோளப்பகுதியில் அதிகமாக காணப்படும் இந்த அபூர்வ வகை கடல்பசுக்களை பிடிப்பது, அரசால் தடைசெய்யப்பட்டதாகும். அவ்வாறு பிடிபடும் கடல்பசுக்களை மீண்டும் உயிரோடு மீனவர்கள் கடலில் விட்டு விடுவது வழக்கமாகும். இதுகுறித்து தமிழ்நாடு வனத்துறை மற்றும் இந்திய வன உயிர் நிறுவனம் சார்பில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கடல்பசு வலையில் சிக்கியதையடுத்து ராஜாமடம் கீழத்தோட்டம் மீனவர்கள் தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் குருசாமிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் எம்.பி.மோகன், இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் மதுமகேஷ், ருக்மிணி சேகர் மற்றும் ஓம்கார் பவுண்டேசன் நிர்வாகிகள் டாக்டர் பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் அன்பு, கடல் பசு நண்பர்கள், மீனவர்கள் ஒருங்கிணைந்து கடல்பசுவை ஆழமான பகுதிக்கு சென்று விடுவித்தனர்.
மீனவர்கள் வலையில் சிக்கிய கடல்பசு சுமார் 10 அடி நீளமும், 500 கிலோ எடை கொண்டதாகவும் உள்ள பெண் கடல் பசுவாகும். இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல் ஒரு கடல்பசு மீனவர்கள் வலையில் சிக்கி, பின்னர் உயிரோடு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக வனத்துறை மற்றும் இந்திய வன உயிர் நிறுவனம் சார்பில் மீனவர்களுக்கு ரூ 10 ஆயிரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.