.

Pages

Thursday, November 1, 2018

பண்டிகை காலங்களில் தரமற்ற உணவுப்பொருள் கடைகளில் விற்பனையா?

தஞ்சாவூர் மாவட்டம், பண்டிகை காலங்களில் தரமற்ற இனிப்பு மற்றும் பலகார பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
எதிர்வரும் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களை முன்னிட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள், பலகாரங்கள், கேக் வகைகள், பேக்கரி பண்டங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவு  நிறுவனங்கள் கட்டாயம் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். பண்டிகை கால உணவுப்பண்டங்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும்.

பேக்கிங் செய்யப்பட்ட உணவு பண்டங்கள் மீது தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப்பொருளின் பெயர், சைவ அல்லது அசைவ குறியீடு, தயாரிக்கப்பட்ட தேதி, பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம், காலவதியாகும் தேதி ஆகியவை குறித்த விபரச்சீட்டினை கட்டாயம் பொருத்த வேண்டும்.

உணவுப்பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் விற்பனை செய்ய வேண்டும். உணவுப்பண்டங்களில் கலப்பட பொருட்களை உபயோகிப்பது, அளவுக்கு அதிகமான நிறமிகள் மற்றும் உணவு கலவைகளை பயன்படுத்துவது, தரமற்ற முறையில் தயார் செய்வது ஆகியவை கண்டறியப்பட்டால்,  சம்பந்தப்பட்ட உணவுக் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சீல் வைக்கப்படும்.

பொது மக்கள் பண்டிகை காலங்களில் உணவு பாதுகாப்புத்துறை பதிவு உரிமம் பெற்ற கடைகள் மற்றும் நிறுவனங்களில்  மட்டுமே உணவுப்பண்டங்கள் மற்றம் பலகாரங்கள் வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உணவு பொருட்கள், பண்டங்கள் மற்றும் பலகாரங்கள் தொடர்பான புகார்கள் குறித்து 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலோ அல்லது மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலகத்தில் நேரிலோ புகார் செய்யலாம். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.