அதிரை நியூஸ்: ஜூலை 01
புனித ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதையொட்டி வருடந்தோறும் ஷவ்வால் பிறை 25 முதல் துல்ஹஜ் பிறை 10 வரை சவுதிவாழ் வெளிநாட்டினர் அனைவரும் புனித மக்காவினுள் பிரவேசிக்க தற்காலிகத் தடை விதிக்கப்படுவது வழமையான நடைமுறையாகும். எனினும் மக்காவினுள் வசிப்பவர்கள் மற்றும் ஹஜ் கால வியாபாரங்கள் தொடர்பாக வந்து செல்பவர்களுக்கு இந்த தடை பொருந்தாது. இவர்கள் இதற்கான சிறப்பு அனுமதியை புனித மக்கா நகர நிர்வாகத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.
இந்த வருடத்திற்கான தடைகாலம் கடந்த ஜூன் 28 முதல் (ஷவ்வால் பிறை 25) முதல் அமுலுக்கு வந்தது. இதனடிப்படையில் புனித மக்கா நகரைச் சுற்றியுள்ள அனைத்து நுழைவாயில்களிலும் கார், பஸ், சரக்கு வாகனங்களுடன் இந்த வருடம் முதல் ஹரமைன் அதிவேக ரயிலில் வரும் பயணிகளும் சோதனை செய்யப்பட்டு பர்மிட் உள்ள வெளிநாட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என புனித மக்கா நகருக்கான நிர்வாகம் அறிவித்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
புனித ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதையொட்டி வருடந்தோறும் ஷவ்வால் பிறை 25 முதல் துல்ஹஜ் பிறை 10 வரை சவுதிவாழ் வெளிநாட்டினர் அனைவரும் புனித மக்காவினுள் பிரவேசிக்க தற்காலிகத் தடை விதிக்கப்படுவது வழமையான நடைமுறையாகும். எனினும் மக்காவினுள் வசிப்பவர்கள் மற்றும் ஹஜ் கால வியாபாரங்கள் தொடர்பாக வந்து செல்பவர்களுக்கு இந்த தடை பொருந்தாது. இவர்கள் இதற்கான சிறப்பு அனுமதியை புனித மக்கா நகர நிர்வாகத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.
இந்த வருடத்திற்கான தடைகாலம் கடந்த ஜூன் 28 முதல் (ஷவ்வால் பிறை 25) முதல் அமுலுக்கு வந்தது. இதனடிப்படையில் புனித மக்கா நகரைச் சுற்றியுள்ள அனைத்து நுழைவாயில்களிலும் கார், பஸ், சரக்கு வாகனங்களுடன் இந்த வருடம் முதல் ஹரமைன் அதிவேக ரயிலில் வரும் பயணிகளும் சோதனை செய்யப்பட்டு பர்மிட் உள்ள வெளிநாட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என புனித மக்கா நகருக்கான நிர்வாகம் அறிவித்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.