ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில் ஆசிரியர் தின செய்திகளாக என் எண்ணம் சார்ந்த சில கருத்துகளையும் பதிவு செய்திட விரும்புகிறேன்.
மாறிவரும் காலச்சூழ் நிலையில் கல்விச் சூழ்நிலையும் பெரிதும் மாறி வருகிறது. 'அகல உழுவதைக்காட்டிலும் ஆழ உழுவதே மேல்' என்ற போக்கு மாறி 'அகல உழுவதே மேல்' என்ற போக்கு கல்வித்துறையில் உருவாகியுள்ளது. தேர்வுகளில் குறிப்பாக 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெற்றுப் பெருமை தேடிக்கொள்ள விரும்பும் பள்ளிகள் பரவலாகக் காணப்படுகின்றன. பெற்றோர்களும் அத்தகைய பள்ளிகளை நாடியே ஓடுகிறார்கள். கட்டணத்தை பற்றிக்கூட கவலைபடாமல். அரசுக் கல்வித்துறையும் இத்தகைய பள்ளிகளையே போற்றி பாராட்டுகிறது. எனவேதான் இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்வை மட்டுமே இலக்காகக் கொண்டு மாணவர்களை உருவாக்குகின்றனர். இத்தகைய மாணவர்கள் உயர்க் கல்வியிலும் ஆய்வுக் கல்வியிலும் சிறப்பிடம் பெறத் தவறி விடுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு கல்வியோடு தன்னம்பிக்கையை வளர்த்தல், சுயசிந்தனையை ஊக்குவித்தல், சூழ்நிலைக்கேற்ப முடிவெடுத்தல், பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், தோல்வி கண்டுத் துவளாதிருத்தல், கூச்சமின்றிப் பேசுதல், நல்ல நண்பர்களைத் தேர்வு செய்தல், காலத்தின் அருமையைக் கருதுதல், மனிதம் சார்ந்த அறப்பண்புகளைப் பெற்றுத் திகழ்தல் போன்ற வாழ்வின் வெற்றிக்குத் தேவையான வழி காட்டல்களையும் கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் ஆசிரியப்பணி அறப்பணியாகப் போற்றுதற்குரிதாகும்.
S.K.M ஹாஜா முகைதீன் M.A., B.Sc., BT
தலைமை ஆசிரியர் ( ஓய்வு )

ஆசிரிய பெருமக்களுக்கு எனது இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉண்மையான சிந்தனை!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
உண்மையான சிந்தனை! ஆசிரிய பெருமக்களுக்கு எனது இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteஏணியாக இருந்து ஏற்றிவிட்டவர்கள் - தோணியாக இருந்து கரை கடக்க உதவியவர்கள் ஆசிரியர்கள்.
ReplyDeleteஆசிரியர்களிடமிருந்து வாழ்த்துக்களைப் பெற்றவர்கள் நாம்.
அவர்களை நாம் வாழ்த்த விரும்பவில்லை. நமது அன்பையும் மரியாதையையும் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்வோமாக!
சிறந்த சிந்தனை !
ReplyDeleteகல்வி நிறுவனங்கள் வியாபாரமாக்க பட்ட இக்காலகட்டத்தில் அவர்கள் கேட்க்கும் தொகையை கொடுத்து படிக்கும் மாணாக்கள் ஆசியர்கள் இடையிலான உறவு மாணவர்களின் படிப்பு முடிந்துடனே அற்று போய்விடுகின்றன.
ReplyDeleteகாரணம் நான் பணம் செலுத்தினேன் நீ எனக்கு படித்துகொடுத்தாய் என்ற வியாபாரநோக்கு இருப்பினும் சமுதாய பற்று மிக்க ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதில் மாற்று கருத்து இல்லை .
நமது அன்பையும் மரியாதையையும் அவர்களுக்கு கண்டிப்பாக தெரிவித்துக் கொள்வோமாக!
ReplyDeleteஆசிரியப் பெருந்தகை அவர்கள் தியாகிகள். மாணவன் வளர்ச்சிக்காகத் தன்னைத் தியாகள் செய்பவர்கள். இவர்கள் போன்றோர் பெயர்கள் கேட்டாலே மனம் இனிக்கும்.
ReplyDeleteதன்னம்பிக்கையை வளர்த்தல், சுயசிந்தனையை ஊக்குவித்தல், சூழ்நிலைக்கேற்ப முடிவெடுத்தல், பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், தோல்வி கண்டுத் துவளாதிருத்தல், கூச்சமின்றிப் பேசுதல், நல்ல நண்பர்களைத் தேர்வு செய்தல், காலத்தின் அருமையைக் கருதுதல், மனிதம் சார்ந்த அறப்பண்புகளைப் பெற்றுத் திகழ்தல் போன்ற வாழ்வின் வெற்றிக்குத் தேவையான வழி காட்டல்களையும் கற்றுத்தர வேண்டும்...வரவேற்க தக்க சிந்தனை
ReplyDelete