அதிராம்பட்டினம், மார்ச்-13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் செக்கடிமேடு, மேலத்தெரு
ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் உட்பட திமுகவினர் அனைவரும்
கைது செய்யப்பட்டனர்.
ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்று கூறி இன்று (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் முன்னர் திமுகவினர் முற்றுகை இட்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் கா. அண்ணாதுரை தலைமையில், அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் முன்னிலையில் அதிராம்பட்டினம் செக்கடி மேடு, மேலத்தெரு ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது ரேஷன் கடையில் பொருட்களை வழங்காமல் பொதுமக்களை அலைக்கழிக்கும் தமிழக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், ஒன்றிய பிரதிநிதிகள் அப்துல் ஹலீம், மருதையன், இஷ்ஹாக் உள்ளிட்ட அனைவரும் போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.