அதிரை நியூஸ்: மார்ச்-13
துபாய்க்கு சுற்றுலா வந்திருந்த வளைகுடா பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி சமீபத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையுடன் மீண்டும் தங்களின் நாட்டிற்கு திரும்புவதற்காக நேற்று 7 இருக்கைகள் கொண்ட டேக்ஸி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி துபை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றனர், இவர்களை இறக்கிவிட்ட டேக்ஸியும் அங்கிருந்து சென்றுவிட்டது.
விமான நிலையம் உள்ளே சென்றவுடன் தான் பெற்ற குழந்தையின் ஞாபகம் வர பதறித் தேடியவர்கள் விமான நிலைய போலீஸாரின் உதவியை நாட, அவர்கள் துபை போக்குவரத்துத் துறையின் (RTA) உதவியுடன் ஜிபிஎஸ் டிரேக்கிங் வழியாக டேக்ஸி டிரைவரை தொடர்பு கொண்டால் அவருக்கும் அதுவரை தெரியவில்லை குழந்தை தன்னுடைய காரின் பின்னிருக்கை சுகமாக உறங்கிக் கொண்டிருப்பது.
டேக்ஸி டிரைவர் உடனடியாக அருகிலிருக்கும் போலீஸ் நிலையத்தில் குழந்தையை ஒப்படைக்க, போலீஸார் குழந்தையை விமான நிலையத்தில் 'தொலைத்து விட்டு' தவித்துக் கொண்டிருந்த பெற்றோரிடம் ஒப்படைக்க, ஒருவழியாக அவர்கள் செல்ல வேண்டிய விமானத்தை தவறவிடாமல் பெற்றோர் குழந்தையுடன் பறந்து சென்றனர்.
துபை போலீஸார் மற்றும் துபை போக்குவரத்துத் துறையின் மின்னல் வேக நடவடிக்கையால் குழந்தை உடன் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பலரின் மனமுவந்த பாராட்டுக்களை அள்ளி வருகிறது. அதேநேரம் குழந்தை தாயுடன் உள்ளதாக தந்தையும், தந்தையுடன் உள்ளதாக தாயும் கருதியதே மறதிக்குக் காரணமாம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபாய்க்கு சுற்றுலா வந்திருந்த வளைகுடா பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி சமீபத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையுடன் மீண்டும் தங்களின் நாட்டிற்கு திரும்புவதற்காக நேற்று 7 இருக்கைகள் கொண்ட டேக்ஸி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி துபை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றனர், இவர்களை இறக்கிவிட்ட டேக்ஸியும் அங்கிருந்து சென்றுவிட்டது.
விமான நிலையம் உள்ளே சென்றவுடன் தான் பெற்ற குழந்தையின் ஞாபகம் வர பதறித் தேடியவர்கள் விமான நிலைய போலீஸாரின் உதவியை நாட, அவர்கள் துபை போக்குவரத்துத் துறையின் (RTA) உதவியுடன் ஜிபிஎஸ் டிரேக்கிங் வழியாக டேக்ஸி டிரைவரை தொடர்பு கொண்டால் அவருக்கும் அதுவரை தெரியவில்லை குழந்தை தன்னுடைய காரின் பின்னிருக்கை சுகமாக உறங்கிக் கொண்டிருப்பது.
டேக்ஸி டிரைவர் உடனடியாக அருகிலிருக்கும் போலீஸ் நிலையத்தில் குழந்தையை ஒப்படைக்க, போலீஸார் குழந்தையை விமான நிலையத்தில் 'தொலைத்து விட்டு' தவித்துக் கொண்டிருந்த பெற்றோரிடம் ஒப்படைக்க, ஒருவழியாக அவர்கள் செல்ல வேண்டிய விமானத்தை தவறவிடாமல் பெற்றோர் குழந்தையுடன் பறந்து சென்றனர்.
துபை போலீஸார் மற்றும் துபை போக்குவரத்துத் துறையின் மின்னல் வேக நடவடிக்கையால் குழந்தை உடன் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பலரின் மனமுவந்த பாராட்டுக்களை அள்ளி வருகிறது. அதேநேரம் குழந்தை தாயுடன் உள்ளதாக தந்தையும், தந்தையுடன் உள்ளதாக தாயும் கருதியதே மறதிக்குக் காரணமாம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.