.

Pages

Tuesday, August 15, 2017

அதிராம்பட்டினம் அரசு (எண் 1, 2) பள்ளிகளில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியாவின் 71 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அதிரை பேரூர் முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை கலந்துகொண்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

மேலும், பள்ளியில் நடந்த கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நினைவுப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் முகம்மது தமீம் கலந்துகொண்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர் காமராஜ், துணைத்தலைவர் முகம்மது தமீம், முன்னாள் கவுன்சிலர்கள் உதயகுமார், சிவக்குமார், முஹம்மது தமீம், ஹாஜா பகுருதீன், அபுதாஹிர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.