அதிராம்பட்டினம், ஆக. 02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் கிட்டுத்தேவர் (வயது 64). விவசாயி. இவர் புதன்கிழமை இயற்கை எய்தினார். இதையடுத்து இவரது மகள்கள் ராஜேஸ்வரி, சுமித்ரா ஆகியோர் தனது தந்தையின் விருப்பப்படி கண்களை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்திற்கு தானம் செய்ய முன்வந்தனர்.
இதையடுத்து, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன், செயலர் அப்துல் ரஹ்மான், பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் சாரா அகமது ஆகியோர் விரைந்து சென்று டாக்டர் மாரிமுது உதவியோடு இறந்த கிட்டுத்தேவரின் இரண்டு கண்களை தானமாக பெற்று கும்பகோணம் அரவிந்த் கண் வங்கிக்கு புதன்கிழமை அனுப்பி வைத்தனர்.
பின்னர் கண்களை தானமாக வழங்க ஏற்பாடு செய்த கிட்டுத்தேவர் மகள்கள் ராஜேஸ்வரி, சுமித்ரா, மருமகன்கள் செந்தில்குமார், முருகானந்தம் ஆகியோருக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் நன்றி கூறினார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் கிட்டுத்தேவர் (வயது 64). விவசாயி. இவர் புதன்கிழமை இயற்கை எய்தினார். இதையடுத்து இவரது மகள்கள் ராஜேஸ்வரி, சுமித்ரா ஆகியோர் தனது தந்தையின் விருப்பப்படி கண்களை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்திற்கு தானம் செய்ய முன்வந்தனர்.
பின்னர் கண்களை தானமாக வழங்க ஏற்பாடு செய்த கிட்டுத்தேவர் மகள்கள் ராஜேஸ்வரி, சுமித்ரா, மருமகன்கள் செந்தில்குமார், முருகானந்தம் ஆகியோருக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் நன்றி கூறினார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.