தஞ்சாவூர், ஆக. 16
தஞ்சாவூரில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தேசிய கொடியினை ஏற்றி வைத்து. தியாகிகளை கௌரவித்து, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து கௌரவித்து 263 பயனாளிகளுக்கு ரூ.43 இலட்சத்து 53 ஆயிரத்து 142 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் கொடி நாள் மிகை வசூல் சாதனை புரிந்த 08 பயனாளிகளுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.4,25,000 மதிப்பீட்டில் திருமண நிதியுதவித் தொகையும், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற 06 பார்வையற்ற மாணவ மாணவியர்களுக்கு ரூ.1,32,000 மதிப்பீட்டிலும், மாவட்ட தாட்கோ மூலம் 1 பயனாளிக்கு ரூ.2,55,700 மதிப்பீட்டில் ஆட்டோவும், தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மானியம் 07 பயனாளிகளுக்கு ரூ.8,16,635 மதிப்பீட்டிலும், தாட்கோ மூலம் இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மான்யம் 03 பயனாளிகளுக்கு ரூ.4,53,848 மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.25,000 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் விலையில்லா சலவைப்பெட்டி 08 பயனாளிகளுக்கு ரூ.46,500 மதிப்பீட்டிலும் மற்றும் விலையில்லா தையல் இயந்திரம் 16 பயனாளிகளுக்கு ரூ.53,680 மதிப்பீட்டிலும், வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் இறப்பிற்கான நிதியுதவி 3 பயனாளிகளுக்கு ரூ.4,50,000 மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஓய்வூதியம் பெறும் 50 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பீட்டிலும், திருமண உதவித்தொகையின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.3,000 மதிப்பீட்டிலும், இயற்கை மரணத்திற்கான உதவிதொகை 3 பயனாளிகளுக்கு ரூ.51,000 மதிப்பீட்டிலும், வேளாண்மை துறை சார்பில் விவசாய இடு பொருட்கள் 13 பயனாளிகளுக்கு ரூ.4,66,990 மதிப்பீட்டிலும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் மான்யத்துடன் 38 பயனாளிகளுக்கு ரூ.57,000 மதிப்பீட்டிலும், கூட்டுறவுத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3,30,000 மதிப்பீட்.டில் கடனுதவியும், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் 7 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி ரூ.70,000 மதிப்பீட்டிலும், 1 பயனாளிக்கு எல்.ஈ.டி பல்பு மற்றும் சோலார் விளக்குகள் தயாரிக்க 1 பயனாளிக்கு ரூ.10,000 க்கான கடனுதவியும், சமூக நலத்துறை சார்பில் விலையில்லா தையல் இயந்திரம் 30 பயனாளிகளுக்கு ரூ.2,37,300 மதிப்பீட்டிலும், கற்பிப்போம் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1,800 மதிப்பீட்டிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நிதியாதரவு மூலம் 42 பயனாளிகளுக்கு ரூ.4,10,000 மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 263 பயனாளிகளுக்கு ரூ.43 இலட்சத்து 53 ஆயிரத்து 142 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார். முன்னதாக தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் மோப்ப நாய் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் வல்லம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் ஜீனியஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லண்டன் கிருஷ்ணமூர்த்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் இந்திய குழந்தைகள் நல சங்கம், சாக்கோட்டை மாதா மாற்றுத்திறனாளி உயர்நிலைபள்ளி, கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆகிய பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 450 மேற்பட்ட மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை துணைத்தலைவர் லோகநாதன், காவல் துறை கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் , மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், பயிற்சி உதவி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.சுபாஷினி, கால்நடைத்துறையின் இணை இயக்குநர் டாக்டர் மாசிலாமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) (பொ) ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சி.மணி, வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூரில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தேசிய கொடியினை ஏற்றி வைத்து. தியாகிகளை கௌரவித்து, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து கௌரவித்து 263 பயனாளிகளுக்கு ரூ.43 இலட்சத்து 53 ஆயிரத்து 142 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் கொடி நாள் மிகை வசூல் சாதனை புரிந்த 08 பயனாளிகளுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.4,25,000 மதிப்பீட்டில் திருமண நிதியுதவித் தொகையும், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற 06 பார்வையற்ற மாணவ மாணவியர்களுக்கு ரூ.1,32,000 மதிப்பீட்டிலும், மாவட்ட தாட்கோ மூலம் 1 பயனாளிக்கு ரூ.2,55,700 மதிப்பீட்டில் ஆட்டோவும், தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மானியம் 07 பயனாளிகளுக்கு ரூ.8,16,635 மதிப்பீட்டிலும், தாட்கோ மூலம் இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மான்யம் 03 பயனாளிகளுக்கு ரூ.4,53,848 மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.25,000 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் விலையில்லா சலவைப்பெட்டி 08 பயனாளிகளுக்கு ரூ.46,500 மதிப்பீட்டிலும் மற்றும் விலையில்லா தையல் இயந்திரம் 16 பயனாளிகளுக்கு ரூ.53,680 மதிப்பீட்டிலும், வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் இறப்பிற்கான நிதியுதவி 3 பயனாளிகளுக்கு ரூ.4,50,000 மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஓய்வூதியம் பெறும் 50 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பீட்டிலும், திருமண உதவித்தொகையின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.3,000 மதிப்பீட்டிலும், இயற்கை மரணத்திற்கான உதவிதொகை 3 பயனாளிகளுக்கு ரூ.51,000 மதிப்பீட்டிலும், வேளாண்மை துறை சார்பில் விவசாய இடு பொருட்கள் 13 பயனாளிகளுக்கு ரூ.4,66,990 மதிப்பீட்டிலும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் மான்யத்துடன் 38 பயனாளிகளுக்கு ரூ.57,000 மதிப்பீட்டிலும், கூட்டுறவுத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3,30,000 மதிப்பீட்.டில் கடனுதவியும், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் 7 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி ரூ.70,000 மதிப்பீட்டிலும், 1 பயனாளிக்கு எல்.ஈ.டி பல்பு மற்றும் சோலார் விளக்குகள் தயாரிக்க 1 பயனாளிக்கு ரூ.10,000 க்கான கடனுதவியும், சமூக நலத்துறை சார்பில் விலையில்லா தையல் இயந்திரம் 30 பயனாளிகளுக்கு ரூ.2,37,300 மதிப்பீட்டிலும், கற்பிப்போம் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1,800 மதிப்பீட்டிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நிதியாதரவு மூலம் 42 பயனாளிகளுக்கு ரூ.4,10,000 மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 263 பயனாளிகளுக்கு ரூ.43 இலட்சத்து 53 ஆயிரத்து 142 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார். முன்னதாக தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் மோப்ப நாய் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் வல்லம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் ஜீனியஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லண்டன் கிருஷ்ணமூர்த்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் இந்திய குழந்தைகள் நல சங்கம், சாக்கோட்டை மாதா மாற்றுத்திறனாளி உயர்நிலைபள்ளி, கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆகிய பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 450 மேற்பட்ட மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை துணைத்தலைவர் லோகநாதன், காவல் துறை கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் , மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், பயிற்சி உதவி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.சுபாஷினி, கால்நடைத்துறையின் இணை இயக்குநர் டாக்டர் மாசிலாமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) (பொ) ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சி.மணி, வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.