.

Pages

Wednesday, August 2, 2017

துபையில் ஜெயிலை சேதப்படுத்திய கைதிக்கு 44,600 திர்ஹம் அபராதம் விதிப்பு

அதிரை நியூஸ்: ஆக.02
துபையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிறைபட்டிருந்த இமாராத் கைதி ஒருவர் சக கைதிகள் மற்றும் போலீஸார் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் ஜெயில் சொத்துக்களை நாசம் செய்ததற்காகவும் 44,600 திர்ஹம் நஷ்டஈடு செலுத்துமாறு கூடுதலாக 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்குமாறும் துபை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

31 வயது இமாராத் கைதி ஒருவர் புகைப்பிடிக்க சிகரெட் கேட்டு கிடைக்காததால் அங்கிருந்த சிசிடிவி கேமிராவை பேப்பர் கொண்டு மறைத்துவிட்டு தன்னுடைய படுக்கையிலிருந்த மெத்தையை லைட்டர் மூலம் தீயிட்டு எரித்துள்ளார். மேலும் எரிந்து கொண்டிருந்த மெத்தையை கைதிகள் உணவருந்தும் பகுதியில் வீசியதுடன் முழு சிறைச்சாலையையும் எரித்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

சிகரெட் கேட்டு அந்த கைதி செய்த அளப்பரை 3 வருட வழக்கு விசாரணைக்குப்பின் சேதமான ஜெயிலை பழுதுபார்ப்பதற்கான நஷ்டஈடாக 44,600 அபராதம் செலுத்த வேண்டும் என முடிவுக்கு வந்துள்ளது.

சினங்கொண்ட சிங்கத்த கூண்டுல அடைச்சா அந்த கூண்டையே செதச்சிடும் பரவாயில்லையா... என்ற காமெடி நினைவுக்கு வருதா!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.