அதிரை நியூஸ்: ஆக. 02
இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஏப்ரல் மாதம் முதல் 2017 மே மாதம் வரையிலான 1,143 நாட்களில் சராசரியாக தினம் ஒருவர் என 1,144 மனிதர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
இதற்கு மாற்றாக மனிதனால் குறிப்பாக சட்டவிரோத வேட்டைக்காரர்களால் தினம் ஒரு சிறுத்தை கொல்லப்படுகிறதாம் அதாவது 2014 ஜனவரி மாதம் முதல் இன்று வரை 1,436 சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டுள்ளன.
யானைகளால் 1,052 பேரும், புலிகளால் 92 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் மனிதனால் மேற்படி காலகட்டத்தில் 345 புலிகளும் 85 யானைகளும் கொல்லப்பட்டுள்ளன. இந்த ஏட்டுக்கணக்குகளுக்கு மேல் அதிகமான மிருகங்கள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதையும் மறுக்கவில்லை.
ஊருக்குள் புகும் வனவிலங்குகளால் மனிதர்கள் அதிகம் தாக்கப்படுவதன் காரணம் வனவிலங்குகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்து அழிப்பதாலேயே ஏற்படுகின்றன என்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் வனவிலங்குகளால் வீடு, வாகனங்கள் சேதப்படுத்தப்படுவதும், மனிதர்கள் காயமடைவதும் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு கடைசியாக மேற்கொள்ளப்பட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பின் படி, சுமார் 30,000 யானைகளும், உலகிலுள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் சரிபாதி சுமார் 2,226 புலிகளும், சுமார் 12,000 முதல் 14,000 வரையில் சிறுத்தைகளும் வாழ்கின்றன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஏப்ரல் மாதம் முதல் 2017 மே மாதம் வரையிலான 1,143 நாட்களில் சராசரியாக தினம் ஒருவர் என 1,144 மனிதர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
இதற்கு மாற்றாக மனிதனால் குறிப்பாக சட்டவிரோத வேட்டைக்காரர்களால் தினம் ஒரு சிறுத்தை கொல்லப்படுகிறதாம் அதாவது 2014 ஜனவரி மாதம் முதல் இன்று வரை 1,436 சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டுள்ளன.
யானைகளால் 1,052 பேரும், புலிகளால் 92 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் மனிதனால் மேற்படி காலகட்டத்தில் 345 புலிகளும் 85 யானைகளும் கொல்லப்பட்டுள்ளன. இந்த ஏட்டுக்கணக்குகளுக்கு மேல் அதிகமான மிருகங்கள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதையும் மறுக்கவில்லை.
ஊருக்குள் புகும் வனவிலங்குகளால் மனிதர்கள் அதிகம் தாக்கப்படுவதன் காரணம் வனவிலங்குகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்து அழிப்பதாலேயே ஏற்படுகின்றன என்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் வனவிலங்குகளால் வீடு, வாகனங்கள் சேதப்படுத்தப்படுவதும், மனிதர்கள் காயமடைவதும் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு கடைசியாக மேற்கொள்ளப்பட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பின் படி, சுமார் 30,000 யானைகளும், உலகிலுள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் சரிபாதி சுமார் 2,226 புலிகளும், சுமார் 12,000 முதல் 14,000 வரையில் சிறுத்தைகளும் வாழ்கின்றன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.