.

Pages

Wednesday, August 2, 2017

நடுவானில் ஸ்ரீ லங்கன் விமானத்தில் மொபைல் போன் பேட்டரியால் தீ

அதிரை நியூஸ்: ஆக. 02
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி பறந்து கொண்டிருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ மற்றும் புகையால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. எனினும், விமான ஊழியர்களின் சமயோசிதத்தால் தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது.

விமானம் 202 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது 70வது நிமிடத்தில் பயணிகளின் தலைக்கு மேல் அமைந்துள்ள பொருட்கள் வைக்கும் கேபின் லாக்கர் ஒன்றிலிருந்து திடீர் என கடும் புகை பரவியது. சுதாரித்துக் கொண்ட விமானப் பணியாளர்கள் Extinguisher எனும் தீ அணைப்பான் மூலம் தீயை அணைக்க முயற்சித்தும் பலனில்லாமல் போகவே சம்பந்தப்பட்ட பையை நீருக்குள் முக்கி அணைத்தனர்.

பயணி ஒருவருக்குச் சொந்தமான எரிந்த அந்தப் பையை சோதித்த போது 2 மொபைல் போன்களும் மொபைல் போனுக்கு பயன்படுத்தும் ஒரு லித்தியம் பேட்டரியும் இருந்தது தெரிய வந்தது. இந்த விபத்தால் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிற சர்வதேச விமான நிறுவனங்களைப் போலலே ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலும் சாம்சங் நோட் 7 வகை மொபைல் போன்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் ஆபத்திலிருந்து விமானத்தை காத்த விமான பணியாளர்களுக்கு அந்நிறுவனம் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டுள்ளது.

Source: Msn / AFP 
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.