அதிரை நியூஸ்: ஆக. 02
மும்பை அருகிலுள்ள தானே (Thane) நகரின் மும்ப்ரா (Mumbra) பகுதியில் 19 வயது இளம் தாய்க்கு பிறந்த ஆண் குழந்தை ஒன்று தன்னோடு உருவான இன்னொரு இரட்டைச் சகோதரனை கருவாக தன் வயிற்றினுள் சுமந்த நிலையில் பிறந்தது.
இதுபோன்ற கரு வளர்ச்சியை monozygotic twin pregnancy என குறிப்பிடுவர். இத்தகைய இரட்டை பிறப்புக்கள் உலகில் இதுவரை சுமார் 200க்குள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. பிறந்த அந்த ஆண் குழந்தை தாயின் வயிற்றினுள் இருக்கும் போதும், பிறந்த பின்பும் ஸ்கேன் பரிசோதனைகள் செய்ததன் மூலம் இந்த முரண்பட்ட கரு வளர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டது.
பிறந்த சிசுவின் வயிற்றுக்குள் இருந்த அந்த இன்னொரு அரைகுறை கரு சுமார் 7 செ.மீ அளவிற்கு வளர்ச்சி அடைந்திருந்ததுடன் அதன் மூளை, கை மற்றும் கால்கள் வளர்ந்திருந்தன என்றாலும் மண்டை ஓடு வளரவில்லை.
குழந்தையின் வயிற்றிலிருந்த அந்த இன்னொரு ஆண் கரு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதை தொடர்ந்து குழந்தை தற்போது உடல்நலம் தேறி வருகிறது. மேலும், விரைவில் தாய்ப்பால் அருந்தத் துவங்கும் என டாக்டர் நீனா நிச்லாணி தலைமையிலான மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
Source: Msn / Mirror
தமிழில்: நம்ம ஊரான்
மும்பை அருகிலுள்ள தானே (Thane) நகரின் மும்ப்ரா (Mumbra) பகுதியில் 19 வயது இளம் தாய்க்கு பிறந்த ஆண் குழந்தை ஒன்று தன்னோடு உருவான இன்னொரு இரட்டைச் சகோதரனை கருவாக தன் வயிற்றினுள் சுமந்த நிலையில் பிறந்தது.
இதுபோன்ற கரு வளர்ச்சியை monozygotic twin pregnancy என குறிப்பிடுவர். இத்தகைய இரட்டை பிறப்புக்கள் உலகில் இதுவரை சுமார் 200க்குள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. பிறந்த அந்த ஆண் குழந்தை தாயின் வயிற்றினுள் இருக்கும் போதும், பிறந்த பின்பும் ஸ்கேன் பரிசோதனைகள் செய்ததன் மூலம் இந்த முரண்பட்ட கரு வளர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டது.
பிறந்த சிசுவின் வயிற்றுக்குள் இருந்த அந்த இன்னொரு அரைகுறை கரு சுமார் 7 செ.மீ அளவிற்கு வளர்ச்சி அடைந்திருந்ததுடன் அதன் மூளை, கை மற்றும் கால்கள் வளர்ந்திருந்தன என்றாலும் மண்டை ஓடு வளரவில்லை.
குழந்தையின் வயிற்றிலிருந்த அந்த இன்னொரு ஆண் கரு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதை தொடர்ந்து குழந்தை தற்போது உடல்நலம் தேறி வருகிறது. மேலும், விரைவில் தாய்ப்பால் அருந்தத் துவங்கும் என டாக்டர் நீனா நிச்லாணி தலைமையிலான மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
Source: Msn / Mirror
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.