அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியாவின் 71 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்து இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி முதல்வர் மீனா குமாரி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அண்ணாசிங்கார வேலு சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் விளையாட்டில் சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு கேடயங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
முன்னதாக பள்ளி ஆசிரியை வீ.ஆர்த்தி அனைவரையும் வரவேற்றார். விழா முடிவில் பள்ளி ஆசிரியை எம்.திவ்யா நன்றி கூறினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி ஆசிரியர் பார்த்தசாரதி தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள் ஹாஜி எம்.எஸ் சைஃபுதீன், ஹாஜி முஹம்மது இப்ராஹீம், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்தியாவின் 71 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்து இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி முதல்வர் மீனா குமாரி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அண்ணாசிங்கார வேலு சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் விளையாட்டில் சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு கேடயங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
முன்னதாக பள்ளி ஆசிரியை வீ.ஆர்த்தி அனைவரையும் வரவேற்றார். விழா முடிவில் பள்ளி ஆசிரியை எம்.திவ்யா நன்றி கூறினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி ஆசிரியர் பார்த்தசாரதி தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள் ஹாஜி எம்.எஸ் சைஃபுதீன், ஹாஜி முஹம்மது இப்ராஹீம், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.