அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியாவின் 71 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் சுகாந்திர தின விழா செவ்வாய்க்கிழமை காலை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தாளாளர் வீ.சுப்பிரமணியன் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் மலைஅய்யன் கலந்துகொண்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் விழாவில் அதிமுக ஒன்றிய செயலாளர் பி. சுப்பிரமணியன், வேளாண்துறை இணை இயக்குநர் (ஓய்வு), கணேசன், அதிராம்பட்டினம் பாஞ்சாலன், சாரா அகமது, அதிரை பேரூர் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
சுதந்திர தின விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றோருக்கு கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா முடிவில் பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன் நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளர் எஸ்.சுப்பையன் மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.
இந்தியாவின் 71 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் சுகாந்திர தின விழா செவ்வாய்க்கிழமை காலை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தாளாளர் வீ.சுப்பிரமணியன் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் மலைஅய்யன் கலந்துகொண்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் விழாவில் அதிமுக ஒன்றிய செயலாளர் பி. சுப்பிரமணியன், வேளாண்துறை இணை இயக்குநர் (ஓய்வு), கணேசன், அதிராம்பட்டினம் பாஞ்சாலன், சாரா அகமது, அதிரை பேரூர் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
சுதந்திர தின விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றோருக்கு கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா முடிவில் பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன் நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளர் எஸ்.சுப்பையன் மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.