.

Pages

Friday, October 19, 2018

ஒரத்தநாடு அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 40 பேர் படுகாயம் (படங்கள்)

ஒரத்தநாடு அருகே அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற தனியார் பேருந்து மற்றொரு தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற PLA என்ற பேருந்தும், தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற மீரா என்ற பேருந்தும் மேல உளூர் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் PLA பேருந்து ஓட்டுநர் உட்பட இரு பேருந்துகளிலும் பயணித்த 40 பயணிகள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், PLA பேருந்து முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த பேருந்துடன் மோதியது தெரியவந்தது. சாலைகளின் நடுவே தானியங்களைப் பரப்பி உலரவைப்பதும் விபத்துகளுக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.